செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஒரு பொறியாளரின் பார்வையில் ஏரியை ஏன் தூர் வாரவேண்டும்? எப்படித் தூர் வாரவேண்டும்?

சுமார் 60 வருடங்களுக்கு முன் தொடர்ந்து ஒரு மாதம் மழை பெய்தாலும் ஏரி நிரம்பி வழியாது. ஏரிக்குள் வந்த நீர் ஊற்றுக்கண்கள் மூலம் நிலத்தடி நீரைச் சென்றடையும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துக் கொண்டேயிருக்கும்.


ஆனால் இப்போது 60 வருடங்களாக தூர் வாராததால் ஏரியின் வயிற்றுப் பகுதி இறுகி இரும்பாகிவிட்டது. இரண்டு நாள் மழையிலேயே ஏரி பொய்யாக நிரம்பி வழிகிறது. நிலத்தடி நீர் உயராமல் தாழ்ந்து கொண்டே செல்கிறது. மழை நீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதனால் ஏரியைத் தூர் வாரி புனரமைக்க வேண்டும்.

வரத்து வாய்க்கால்களையும் தூர் வாரி புனரமைக்க வேண்டும்

இனி எப்படித் தூர் வாரவேண்டும் என்பதைப் பார்ப்போம்

ஒரேக் கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல

ஏரியை தன் நிலைக்குக் கொண்டுவர...

1) ஏரி தன் கொள்ளவில் 30% அளவிற்கு தூர் நிறைந்துவிட்டது - தூர் வாரி மண்ணை வெளியே எடுத்துச் செல்லாமல் ஏரியின் மய்யப் பகுதியில் கொட்டி மேடுறுத்தி தீவாக உருவாக்க வேண்டும். அதன் மேல் மட்டத்தை ஏரியின் நீர்ப்பிடிப்பு மட்டத்திற்கு மேல் ஆறு அடியாக உயர்த்த வேண்டும். நீர்ப் பிடிப்பு, மட்டத்தின் மேலுள்ள மண்ணின் கொள்ளவே 30% தூர் வாரிய மண் ஆகும்.

உருவாக்கியத் தீவில் மரக்கன்றுகளை 20 அடிகள் இடைவெளியில் நட்டு ஒரு தோப்பை உருவாக்க வேண்டும்.

திட்டத்தை செயல்படுத்த, ஏரியின் உட்பகுதியில் (மய்யத்தில்) மூன்றில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அதைச் சுற்றி லும் அகழியை (100 அடி முதல் 200 அடி ‘அகலத்திலும் 3 அடி முதல் 6 அடி ஆழத் திலும்) தோண்டி எடுத்த மண்ணை அகழி யின் உட்புறத்தில் கொட்ட வேண்டும். கொட்டும்போது அடுக்கு முறையில் கொட்டி மேடாக்கவேண்டும். அதன் மேல்மட்டம் நீர்ப் பிடிப்பு மட்டத்திற்கு மேல் ஆறு அடியாக இருக்கச் செய்ய வேண்டும். இப்போது நமக்கு ஒரு தீவு கிடைத்துவிடும் அதன் மீது பயன் தரும் மரக்கன்றுகளை (ஆல், அரசு. புளி, விளா, வேப்பம், வில்வம், நெல்லி, தென்னை மற்றும் மா ஆகியவை களை தக்க விகிதத்தில்) நட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். தோண்டிய மண்ணில் ஒரு பகுதியை பயன் படுத்தி ஏரிக்கரையை பலப் படுத்தி அதன் இரு புறத்திலும் பனைமரக் கன்றுகளை எட்டடி இடை வெளிகளில் நட வேண்டும். இதே போல தமிழ் நாட்டிலுள்ள சுமார் 43,000 ஏரிகளை புனரமைத்தால், தமிழ் நாட் டில் கிடைக்கும் மழை நீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறையைக் கற்று விவ சாயத்தை வெற்றிகரமாக செய்யலாம்.

ஏரிகளை புனரமைத்த பிறகு, அதன் காரணமாக உயரும் நிலத்தடி நிலவரங் களை மக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் மக் களே முன்வந்து ஏரியைப் பராமரிப்பார்கள். நமக்குக் கிடைக்கும் காவிரி நீர் குறைந் தாலும் கவலைப் படவேண்டாம்.

தோப்பின் மூலம் பறவைகள் எண் ணிக்கை பெருகும்.அகழியில் தேங்கி நிற்கும் நீரினால் மீன் வளம் பெருகும். நீர் ஏற்ற செலவாகும் மின்சார செலவு குறை யும்.

(பொறியாளர் பரசு.சண்முகம்
கடலூர்)

- விடுதலை ஞாயிறு மலர், 7.4.18