திங்கள், 5 செப்டம்பர், 2016

வீட்டுக்கு வீடு தோட்டம்....

நடுத்தர வருவாய் பெறும் மக் களிடையே இன்றைய மிகவும் முக்கிய தேவையான தினசரி காய்கறிகள் வாங்குவது பெரும் சுமையாக உள்ளது. சந்தையில் காய்கறி வரத்து இல்லாத காலத்தில் விலை சற்று அதிகரித்தும் வரவு அதிகம் உள்ள நிலையில் மிகவும் குறைந்த விலையில் விற்கும். ஆனால், சில ஆண்டுகளாக அன்றாடம் உணவுப் பொருளில் பயன்படும் காய்கறிகளின் விலை ஏறிய வண்ணமே உள்ளது. குறையும்போது மிகவும் குறைந்த பட்சமே குறைந்து விரைவில் மீண்டும் விலை ஏறிவிடுகிறது.
முக்கியமாக சேமிப்பில் சிறந்து விளங்கும் பெண்கள் காய்கறி விலையேற்றத்தின் காரணமாக சேமிக்கவழியில்லாமல் அவசரத் தேவைக்கு பணமின்றி திகைத்து நிற்கும் நிலையை அன்றாடம் காண நேர்கிறது. காய்கறித் தோட்டம் என்பது இன்று மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது, குறைந்த இடம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட் களைக் கொண்டே காய்கறிகளை விளைவித்து நச்சுக் கலப்பற்ற காய்கறிகளை நாமே விளைவிக்க லாம்.
ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை
காய்கறிகள் உணவில் ஊட்டச் சத்தை அதிகரிப்பதோடு மட்டு மல்லாமல், உணவையும் ருசியாக் குகின்றன. ஊட்டச்சத்து வல்லு நர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங் களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.
வீட்டுக் காய்கறித் தோட்டம்
மேற்கண்ட கருத்துகளை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான காய் கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார சீர் கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது.
மிகக் குறைவான இடத்தில் காய்கறி பயிரிடப்படுவதால் மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் கட்டுப்பாட்டை மேற் கொள்ள முடிகிறது. மேலும் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினாலே போதுமானது. இதனால் காய்கறி களில் நச்சு இரசாயனங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.
இடம் தேர்வு செய்தல்
வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன் படுத்திக் கொள்ளவும் இது சுலப மாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொருத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொருத்தும் காய்கறி தோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய வேண்டும். காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்..
நிலம் தயார் செய்தல்
நிலத்தை 40 செ.மீ. ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். காய்கறித்தோல் பழத்தோல் கழிவு களை மண்ணில் இட்டு அதை உரமாக மாற்றவேண்டும்.
அட்டவணையில் கண்ட திட்டமுறையில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பத்தியிலும் சில பயிர்கள் இடைவிடாது இடம் பெறச் செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பத்தியிலும் ஒரு நெடுங்காலப் பயிரும், குறுகிய காலப் பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.
காய்கறி தோட்டத்தின்
பயன்கள்
முதலில் நம் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றிக் கொள் ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது. எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச் சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடை யனவாகும்.
- சாரா
விடுதலை ஞாயிறு மலர், 16.7.16

சனி, 3 செப்டம்பர், 2016

வேளாண்மையில் பூச்சிக் கொல்லியாகப் பயன்படும் சாராயம்!

தேவைகளின் உச்சமே கண்டுபிடிப்புகளின் தோற்றமாகும். இதை மெய்ப்பிக்கும் விதமாக மகாராஷ்ட்டிர மாநில விவசாயிகள் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை விரட்டுவதில், பயிர்களைக் காப்பதில் தாங்கள் சந்தித்துவரும் இடர்பாடுகளிலிருந்து விடுதலை பெற முயன்றதன் விளைவாக, சாராயத்தால் இத்தொல்லைக்கு விடிவு கிடைக்கும் என்பதைக் கண்டிருக்கின்றனர். இராசாயன உரங்களின் அபரிமிதமான உபயோகத்தால், நிலம் தன் நல்லியல்பு குன்றி, குறைந்த அளவே விளைச்சல் தரும் சூழலையும் மாற்றிடும் இயல்பு சாராயத்திற்கு உண்டு என்பதை அனுபவ வாயிலாக அறிந்து பயனடைந்து வருகின்றனர்.


நாட்டு சாராயம், கள்ளு, மற்றும் மஹா என்னும்படியான போதைப் பானம் ஆகியவற்றில் ஒன்றை 100லிருந்து 120 மி.லி. வரை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து, தாவரங்கள் பூத்துப் பலன் கொடுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவற்றின் மீது தெளித்தால், அது பூச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதோடு, தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஜிப்ராலிக் அமிலச் சுரப்பைத் தூண்டுவதால், வளர்ச்சியுடன் நல்ல விளைச்சலையும் தருகிறது என்பதைக் கண்கூடாகக் கண்டுள்ளனர்.

பூச்சிக்கொல்லிகளுக்கு நல்ல மாற்றாக இந்த (ஆல்கஹால்) சாராயம் உதவுகிறது என்று விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு 10 அல்ல 12 முறை பூச்சிக்கொல்லிகளை தெளிக்க பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகின்றது. ஆனால், சாராயக்கலவை ஒரு குடுவை 180 மிலி ரூபாய் 25 முதல் 30க்குள் அடக்கமாகி விடுவதோடு விவசாயிகளுக்கு சுலபமாகவும் கிடைத்துவிடுகிறது.

மகாராட்டிர மாநிலத்தில் லாத்தூர், அஸ்மணாபாத், நான்டெட் பிரபாணி, யுவமால் மற்றும் பீட் மாவட்டங்களில் இம்முறை பரவலாக உபயோகத்தில் உள்ளது.

ஆதாரம்: ‘Open’ 21.3.2016 தகவல்: கெ.நா.சாமி
-உண்மை இதழ்,1-15.7.16