வெள்ளி, 13 நவம்பர், 2015

விவசாயத்தில் முன்மாதிரி பணிகள்: இந்திய பெண்ணுக்கு உயரிய விருது


ஹூஸ்டன், அக். 27-_ அமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் சமூக சேவை புரிந்து வந்தவர் அனிதா அடல்ஜா. இந்திய வம்சாவளி பெண் மணியான இவர், பின்னர் விவசாயத்தில் ஈடுபட்டார். இதற்காக ஆர்காடியா மய் யம் என்ற பெயரில் உணவு மற்றும் விவசாய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
நவீன முறையில் விவசா யத்தில் ஈடுபட்டு வரும் அனிதா அடல்ஜா, மண்வளம் மற்றும் நீர்வள மேம்பாடு, பசுமைக்கூட வாயு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முன்மாதிரி பணிகளை மேற் கொண்டார். இதனால் மாற்றத்துக்கான சாதனை யாளர் என்ற உயரிய விருதுக்கு, வெள்ளை மாளிகை இவரை தேர்ந்தெடுத்தது.
விவசாயத்தில் சாதனை புரிந்த மேலும் 11 பேர் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டு, இவர்களுக் கான விருது நேற்று இரவு வழங்கப்பட்டது. விருது பெற்ற அனிதா அடல்ஜா, ஜிப்சோனியா, பா, வாஷிங் டன் உள்ளிட்ட இடங்களிலும் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை, 0.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக