புதன், 18 மே, 2016

3 விதமான காய்கள் காய்க்கும் அதிசய செடி: வேளாண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு


புதுச்சேரி, ஜன. 9 
புதுவை கூடப்பாக்கம் பகுதியில் சேர்ந்த வேளாண். விஞ்ஞானி வேங்கடபதி. இவர் கனகாம்பரம், சவுக்கு, மிளகாய் ஆகியவைகளில் புதிய ரகங்களை கண்டு பிடித்து சாதனை படைத் தார்.
தற்போது அவரும், அவரது மகள் சிறீலட் சுமியும் இணைந்து ஒரு செடியில் கத்திரிக்காய், மிளகாய், தக்காளி ஆகிய 3 வகை காய்கள் காய்க்கும் நவீன செடியை கண்டு பிடித்துள்ளனர்.
அந்த செடிக்கு கலாம் கத்திரி என்று பெயர் சூட்டி உள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சாதாரண கத்திரிக்காய் செடி 6 மாதம்தான் உயி ரோடு இருக்கும். இதை மாற்றி அவை 3 ஆண் டுகள் உயிரோடு இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
சுண்டைக்காய் செடி வேர் பலமானது. நீண்ட காலம் வாழும் சக்தி உள் ளது. எனவே, கத்திரிக் காய் செடியையும், சுண் டைக்காய் செடியையும் ஒட்டு முறையில் சேர்த் தோம். மேலும் தக்காளி, மிளகாய் செடிகளை ஒட்டு முறையில் அதனோடு இணைத்தோம். இதன் மூலம் புதிய ரக கத்திரிக் காய் செடி உருவாகியுள் ளது.
ஒட்டு முறையில் உரு வாக்கிய  செடியில் ஒரு கிளையில் கத்திரிக் காயும், ஒரு கிளையில் மிளகாயும், மற்றொரு கிளையில் தக்காளியும் காய்க்கும் தறுவாயில் உள்ளது. இந்த செடிக்கு கலாம் கத்திரி என்று பெயர் சூட்டி உள்ளோம். உழவர் தினத்தில் முதல் அமைச்சர் ரங்கசாமி இந்த புதிய ரகத்தை வெளியிட அனுமதி கேட்டுள் ளோம்.
வீட்டில் நவீன ரக இந்த ஒரு செடி வளர்த் தால் ஒரு குடும்பத்துக்கு தேவையான கத்திரிக் காய்கள் 2 ஆண்டுகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
விடுதலை,9.1.16