வெள்ளி, 13 நவம்பர், 2015

திசு வாழை மற்றும் காய்கறி பயிர் சாகுபடி பயிற்சி பட்டறை


தஞ்சை, அக்.17_ காவிரி டெல்டா உழவர் உற்பத்தி யாளர் நிறுவனம் தனது உறுப்பினர்களுக்காக புதிய தொழில்நுட்பங் களையும், சந்தை வாய்ப்பு களையும் ஏற்படுத்தி வரு கின்றது.
அதன் தொடர்ச்சியாக திசு வாழை மற்றும் காய் கறி சாகுபடியில் ஆர்வம் உள்ள விவசாயிகளுக்காக ஒரு நாள் பயிற்சிப் பட் டறை அக்டோபர் 16 ஆம் தேதி வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

நபார்டு வங்கி ஜெயின் இரிகேஷன் சிஸ்டம்ஸ், மற்றும் பெரியார் தொழில் நுட்ப வணிகக் காப்பகம் இவற்றுடன் இணைந்து நடத்திய இந்தப் பயிற் சியை பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசி ரியர் நல்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்து தலை மையுரை ஆற்றினார்.
திருச்சி மகளிர் தோட் டக் கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் எம். ஜவகர்லால் முதுகுளம் பகுதி வாழை மற்றும் காய் கறி சாகுபடி திட்டத் தைப்பற்றி அவர் உரை யாற்றும்போது,பழங்கள் மற்றும் மல் லிகை மலர்கள் ஏற்றுமதி செய்வதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை எடுத்துக்கூறி, இதுபோல காய்கறிகளுக்கும் செய்ய முடியும் என்று கூறினார். ஜெயின் நிறுவன அலு வலர்கள் தமிழ்ச்செல்வன் குருசாமி, மணி அமுதன் ஆகியோர் திசு வாழை வளர்ப்பு, சொட்டுநீர் பாச னம், நெல்லுக்கு சொட்டு நீர்ப்பாசனம் போன்ற தலைப்புகளிலும் வேளாண் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் வெ.பிரகாசம், அங்கக முறையில் காய் கறிச் சாகுபடி செய்யும் முறை பற்றியும், அதற்கான அங்கீகாரம் பெறும் முறைகளைப் பற்றியும் விளக்கிக் கூறினார்.
வாழை முன்னோடி விவசாயி இராமகிருஷ் ணன் மற்றும் அங்ககக் காய்கறி விவசாயி முருகன் ஆகியோர் தமது அனுப வங்களை பகிர்ந்து கொண் டனர். சொட்டு நிர்ப்பாச னக் கருவிகள், திசு முறை யில் உருவாக்கிய வாழை மற்றும் மாதுளை கன்று கள், சொட்டு நீர்ப்பாசன முறையில் நெல் உற்பத்திக் கான மாதிரி வயல் போன் றவற்றுடன் பல்கலைக் கழக உயிர்த் தொழில் நுட்பத்துறை மாணவர் கள் உற்பத்தி செய்து வரும் நுண்ணுயிர் இடுபொருள் களும் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. இந்நிகழ்ச்சியில் 400_க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
=விடுதலை,17.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக