ஞாயிறு, 20 நவம்பர், 2016
ஒரே செடியில் இந்த அதிசயம்
புதன், 9 நவம்பர், 2016
கர்நாடகத்தில் விவசாய நிலம் விற்பனை பற்றிய சில செய்திகள்
👉அன்பு நண்பர்களே...
கர்நாடகத்தில் விவசாய நிலம் விற்பனை பற்றிய சில செய்திகளை தெரிந்து கொள்ளலாமே...?!!!!!
👉கர்நாடகத்தில் வாழும் விவசாயி அல்லாத எந்த ஒரு தனி மனிதரும் விவசாய நிலம் வாங்க முடியாது.
👉கர்நாடகத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும்,எத்தனை கோடிக்கு வேண்டுமானாலும்,
யார் வேண்டுமானாலும் விவசாய நிலம் தவிர்த்து பிற சொத்துக்களை வாங்கலாம்.
👉ஒரு விவசாயி மட்டுமே விவசாய நிலம் வாங்க முடியும்.
👉விவசாயிகளுக்கு RTC என்கிற சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு வட்டார அலுவலகத்திலும் ரூ பத்து செலுத்தி,
கிராமத்தின் பெயர்,
சர்வே எண்,
நில உரிமையாளர் பெயர் கூறினால் கர்நாடக அரசுவின் முத்திரையோடு கிடைத்து விடும்.
👉யார் பெயரில் RTC இருக்கிறதோ அவர் பெயரில் மட்டுமே விவசாய நிலம் வாங்க முடியும்.வாரிசுகளோ,
மனைவியோ,அம்மா,
அப்பா கூட எனது உறவு என்று கூறி விவசாய நிலம் வாங்க முடியாது.
👉தமிழகத்தில் இருந்து ஒருவர் சென்று கர்நாடகத்தில் விவசாய நிலம் வாங்க முடியுமா?
வாங்க முடியும்...!!!
தமிழகத்தில் அவர் பெயரில் விவசாய நிலம் உள்ளது என சர்வே எண்ணுடன் வட்டாட்சியரிடம் சான்றிதழ் வாங்கி கொடுத்தால் போதும்..
👉அவர் தமிழரோ,
மலையாளியோ,
தெலுங்கரோ,
வடஇந்தியரோ யாராக இருந்தாலும் அவர் விவசாயியாக இருக்க வேண்டும்.
கர்நாடகத்தில் கன்னடர் என்ற தகுதி மட்டுமே சான்றாகாது.
👉கம்பெனி பெயரிலோ,
கூட்டமைப்பு பெயரிலோ,
சொஸைட்டிகள் பெயரிலோ விவசாய நிலம் வாங்க இயலாது.
தனி நபர்கள் பெயரில் மட்டுமே வாங்க முடியும்.
👉கர்நாடகத்தில் ஒரு நபர் திடீரென விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசைப்பட்டால் என்ன செய்வது?
இதற்கு முன்பு விவசாயக் கூலியாக இருந்தால் வீ ஏ ஓ விடம் சான்றிதழ் வாங்கி வாங்க இயலும்.
👉ஆண்டு வருமானம் 2 இலட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.
👉கடந்த சில மாதங்களுக்கு முன்பு 25 இலட்சம் வரை வருமானம் வருபவர்களும் நிலம் வாங்கலாம் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
👉கிராமத்தில் கூட மனையாக வாங்க முடியாது.வீடாக
வாங்கலாம்.
பஞ்சாயத்து களோ
நகராட்சி,
மாநகராட்சிகளோ மட்டுமே விவசாய நிலத்தை வாங்கி நகர்களை உருவாக்க முடியும்..
👉~~~~மிக மிக முக்கியமான செய்தி~~~~
கர்நாடகத்தில் எந்த ஒரு தனி மனிதரும் நிலம் வாங்கி மனை போட்டு விற்பனை செய்ய முடியாது.
👉வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் குறைந்த பட்சம் 500 நபர்களின் சொஸைட்டி உறுப்பினர்கள்
பட்டியல் கொடுத்தால்
RTC உள்ள நபர்கள் பெயரில் விவசாய நிலத்தை வாங்கி Urban Development Authority மூலம் ஒப்புதல் பெற்று அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டு மனை விநியோகம் செய்யலாம்.விற்பனை செய்யக் கூடாது..!!
👉ஒரு நகர் அமைக்க வேண்டுமெனில்,
அரசுக்கும் இலவயமாக இடம் ஒதுக்கி கொடுத்து பூங்கா,சாலைகள்,
வணிக வளாகங்கள் மற்றும் எதிர்கால கட்டமைப்புக்காக Civic Amenities இட ஒதுக்கீடு செய்தால் தான் கர்நாடகத்தில் அந்த நகர் அங்கீகரிக்கப்பட்ட நகர் ஆகும்.
👉ஒரு ஏக்கர் 43,560 சதுர அடி.இதில் கர்நாடக அரசு சட்டப்படி தோராயமாக 20,000 சதுர அடி தான் மனையாக விற்பனை செய்ய முடியும்.
👉தமிழகத்தில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இன்னும் இரண்டு தலைமுறைக்கு தேவையான வீட்டு மனைகள் விவசாய நிலங்களை தமிழகம் வாழ் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆக்கிரமிப்பு செய்து மனைகள் ஒதுக்கி வண்ண வண்ண கொடிகள் பறந்து கொண்டுள்ளது.
👉கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலை களாகட்டும்,மாநில சாலைகளிலோ
வீட்டு மனை ஒதுக்கியிருப்பதை எங்கேயும் பார்த்திருக்க முடியாது.
தார் சாலை கண்டவிடமெல்லாம் சென்னைக்கு மிக அருகாமையில்....
விழுப்புரம் வரை விற்று விட்டனர்...
இனி ஆண்டவர்கள்[!!!]
தான் காப்பாற்ற வேண்டும்..
அரிமா.கு.புகழேந்தி
இயற்கை விவசாயி,
மைசூரு.
திங்கள், 5 செப்டம்பர், 2016
வீட்டுக்கு வீடு தோட்டம்....
பயன்கள்
சனி, 3 செப்டம்பர், 2016
வேளாண்மையில் பூச்சிக் கொல்லியாகப் பயன்படும் சாராயம்!
தேவைகளின் உச்சமே கண்டுபிடிப்புகளின் தோற்றமாகும். இதை மெய்ப்பிக்கும் விதமாக மகாராஷ்ட்டிர மாநில விவசாயிகள் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை விரட்டுவதில், பயிர்களைக் காப்பதில் தாங்கள் சந்தித்துவரும் இடர்பாடுகளிலிருந்து விடுதலை பெற முயன்றதன் விளைவாக, சாராயத்தால் இத்தொல்லைக்கு விடிவு கிடைக்கும் என்பதைக் கண்டிருக்கின்றனர். இராசாயன உரங்களின் அபரிமிதமான உபயோகத்தால், நிலம் தன் நல்லியல்பு குன்றி, குறைந்த அளவே விளைச்சல் தரும் சூழலையும் மாற்றிடும் இயல்பு சாராயத்திற்கு உண்டு என்பதை அனுபவ வாயிலாக அறிந்து பயனடைந்து வருகின்றனர்.
நாட்டு சாராயம், கள்ளு, மற்றும் மஹா என்னும்படியான போதைப் பானம் ஆகியவற்றில் ஒன்றை 100லிருந்து 120 மி.லி. வரை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து, தாவரங்கள் பூத்துப் பலன் கொடுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவற்றின் மீது தெளித்தால், அது பூச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதோடு, தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஜிப்ராலிக் அமிலச் சுரப்பைத் தூண்டுவதால், வளர்ச்சியுடன் நல்ல விளைச்சலையும் தருகிறது என்பதைக் கண்கூடாகக் கண்டுள்ளனர்.
பூச்சிக்கொல்லிகளுக்கு நல்ல மாற்றாக இந்த (ஆல்கஹால்) சாராயம் உதவுகிறது என்று விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு 10 அல்ல 12 முறை பூச்சிக்கொல்லிகளை தெளிக்க பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகின்றது. ஆனால், சாராயக்கலவை ஒரு குடுவை 180 மிலி ரூபாய் 25 முதல் 30க்குள் அடக்கமாகி விடுவதோடு விவசாயிகளுக்கு சுலபமாகவும் கிடைத்துவிடுகிறது.
மகாராட்டிர மாநிலத்தில் லாத்தூர், அஸ்மணாபாத், நான்டெட் பிரபாணி, யுவமால் மற்றும் பீட் மாவட்டங்களில் இம்முறை பரவலாக உபயோகத்தில் உள்ளது.
ஆதாரம்: ‘Open’ 21.3.2016 தகவல்: கெ.நா.சாமி
செவ்வாய், 7 ஜூன், 2016
விளைச்சலுக்கு உதவும் நுண்ணுயிரிகள்
புதன், 18 மே, 2016
3 விதமான காய்கள் காய்க்கும் அதிசய செடி: வேளாண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு
புதுச்சேரி, ஜன. 9 புதுவை கூடப்பாக்கம் பகுதியில் சேர்ந்த வேளாண். விஞ்ஞானி வேங்கடபதி. இவர் கனகாம்பரம், சவுக்கு, மிளகாய் ஆகியவைகளில் புதிய ரகங்களை கண்டு பிடித்து சாதனை படைத் தார்.