ஞாயிறு, 20 நவம்பர், 2016

ஒரே செடியில் இந்த அதிசயம்

சுண்டைக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரே செடியில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி ஆகிய 3 காய்களை விளை வித்து புதுச்சேரியைச் சேர்ந்த தந்தை-மகள் சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த கூடப்பாக் கத்தைச் சேர்ந்தவர் டி.வெங்கடபதி. இவர், விவசாயத்தில் ஆராய்ச்சி செய்து, கனகாம்பரம் பூ செடிகளில் பல்வேறு ரகங்களை உருவாக்கி உள்ளார்.
இப்போது அனைத்து நிலங்களுக்கும் ஏற்ற வகையிலான சவுக்கு ரகங்களை உருவாக்கிக் கொடுத்து வருகிறார். சாகுபடியில் விவசாயிகள் லாபம் ஈட்டும் வகையில் பல்வேறு புதிய ரகங்களை உருவாக் கிக் கொண்டே இருக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பங் களை கற்றுக் கொண்டு, அதைச் செயல்படுத்துகிறார்.
இவரது சேவைக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இவரை டில்லிக்கு வரவழைத்து பாராட்டியுள்ளார். இவரது ஆராய்ச்சிகளின் வழிமுறைகளும், ஆராய்ச்சிகளின் முடிவுகளும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இவரது விவசாய சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மசிறீ விருதும் வழங்கி உள்ளது.
ஒரே செடியில் 3 காய்கள்: அணுக்கதிர் வீச்சு மூலம் செடிகளை உருவாக்கி வரும் வெங்கடபதி, இதற்காக கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குச் சென்று நவீன ரக செடி வகைகளை உருவாக்கி வருகிறார். தற்போது சுண்டைக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரே செடியில் கத்தரி, மிளகாய், தக்காளி விளைவித்துள்ளார். கலாம் கத்தரி, மோடி மிளகாய், சோனியா தக்காளி என அவற்றுக்கு பெயரிட்டுள்ளார்.
கத்தரி செடியின் ஆயுள் காலம் 6 மாதம். மழைக்காலங்களில் பல்வேறு நோய்கள் தாக்கி வேர்கள் அழுகி செடிகள் இறக்கின்றன. 6 மாத கத்தரி செடியில் இதன் மகசூல் 4 முதல் 8 கிலோ மட்டும் கிடைக்கும். இதனால் இவற்றை நவீன ரக ஆய்வின் மூலம் உருவாக்கி உள்ளார்.
தந்தைக்கு உதவும் மகள்: இவரது மகள் ஸ்ரீலட்சுமியும் 7 வயது முதலே தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். உயர்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கத்தரியை உருவாக்கி உள்ளார். இதுகுறித்து வேங்கடபதி, அவரது மகள் சிறீலட்சுமி ஆகியோர் கூறியதாவது:
சுண்டக்காயில் பல வகைகள் உள்ளன. முதலில் ஜப்பான், கொரியா, நாடுகளில் தான் இதன் தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் காய்க்கும் இனத்தில் வேர்ச் செடியாக வைத்து கத்தரி செடிகளை ஒட்டுமுறையில் வளர்க்கின்றனர்.
இதற்காக சுண்டைக்காய் செடியை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காமா கதிர்வீச்சு செலுத்தி சோதித்தபோது, காய் காய்க்காத இனம் உருவாகியது. இதில் செடிகள் வீரியமாக வளர்கின்றன. அவற்றில் கத்தரி இனத்தை ஒட்டு வைத்து பார்த்த போது, மிக வேகமாக வளர்ந்தன. இதன் மூலம் 6 மாதங்களில் 12 முதல் 18 கிலோ வரை காய்கள் கிடைத்தன.
இவற்றின் ஆயுள் காலம் 3 ஆண்டுகள் ஆகும். வேர்ச் செடி ஆதலால் எந்த நோயும் தாக்காது. மேலும் காய்க்காத சுண்டைக்காய் செடியில் ஒட்டு முறையில் 3 விதமான காய்கள் கத்தரி, மிளகாய், தக்காளி விளைவித்து சோதனை செய்துள்ளோம். இவை மூன்றும் ஒரே வகையான குடும்பம் என்பதால் 3 இனங்களும் சுண்டைக் காயில் ஒட்டி வளர்கிறது.
காய்கள் காய்க்காத சுண்டைக்காய் இனத்தை நாங்கள் வடிவமைத் துள்ளோம். அதன் சக்தி செடிகள் வளர்வதற்கே பயன்படுகிறது எனத் தெரிவித்தனர்.
-விடுதலை ஞா.ம.,19.3.16

புதன், 9 நவம்பர், 2016

கர்நாடகத்தில் விவசாய நிலம் விற்பனை பற்றிய சில செய்திகள்

👉அன்பு நண்பர்களே...
கர்நாடகத்தில் விவசாய நிலம் விற்பனை பற்றிய சில செய்திகளை தெரிந்து கொள்ளலாமே...?!!!!!
👉கர்நாடகத்தில் வாழும் விவசாயி அல்லாத எந்த ஒரு தனி மனிதரும் விவசாய நிலம் வாங்க முடியாது.
👉கர்நாடகத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும்,எத்தனை கோடிக்கு வேண்டுமானாலும்,
யார் வேண்டுமானாலும் விவசாய நிலம் தவிர்த்து பிற சொத்துக்களை வாங்கலாம்.
👉ஒரு விவசாயி மட்டுமே விவசாய நிலம் வாங்க முடியும்.
👉விவசாயிகளுக்கு RTC என்கிற சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொரு வட்டார அலுவலகத்திலும் ரூ பத்து செலுத்தி,
கிராமத்தின் பெயர்,
சர்வே எண்,
நில உரிமையாளர் பெயர் கூறினால் கர்நாடக அரசுவின் முத்திரையோடு கிடைத்து விடும்.
👉யார் பெயரில் RTC இருக்கிறதோ அவர் பெயரில் மட்டுமே விவசாய நிலம் வாங்க முடியும்.வாரிசுகளோ,
மனைவியோ,அம்மா,
அப்பா கூட எனது உறவு என்று கூறி விவசாய நிலம் வாங்க முடியாது.
👉தமிழகத்தில் இருந்து ஒருவர் சென்று கர்நாடகத்தில் விவசாய நிலம் வாங்க முடியுமா?
வாங்க முடியும்...!!!
தமிழகத்தில் அவர் பெயரில் விவசாய நிலம் உள்ளது என சர்வே எண்ணுடன் வட்டாட்சியரிடம் சான்றிதழ் வாங்கி கொடுத்தால் போதும்..
👉அவர் தமிழரோ,
மலையாளியோ,
தெலுங்கரோ,
வடஇந்தியரோ யாராக இருந்தாலும் அவர் விவசாயியாக இருக்க வேண்டும்.
கர்நாடகத்தில் கன்னடர் என்ற தகுதி மட்டுமே சான்றாகாது.
👉கம்பெனி பெயரிலோ,
கூட்டமைப்பு பெயரிலோ,
சொஸைட்டிகள் பெயரிலோ விவசாய நிலம் வாங்க இயலாது.
தனி நபர்கள் பெயரில் மட்டுமே வாங்க முடியும்.
👉கர்நாடகத்தில் ஒரு நபர் திடீரென விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசைப்பட்டால் என்ன செய்வது?
இதற்கு முன்பு விவசாயக் கூலியாக இருந்தால் வீ ஏ ஓ விடம் சான்றிதழ் வாங்கி வாங்க இயலும்.
👉ஆண்டு வருமானம் 2 இலட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது.
👉கடந்த சில மாதங்களுக்கு முன்பு 25 இலட்சம் வரை வருமானம் வருபவர்களும் நிலம் வாங்கலாம் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
👉கிராமத்தில் கூட மனையாக வாங்க முடியாது.வீடாக
வாங்கலாம்.
பஞ்சாயத்து களோ
நகராட்சி,
மாநகராட்சிகளோ மட்டுமே விவசாய நிலத்தை வாங்கி  நகர்களை உருவாக்க முடியும்..
👉~~~~மிக மிக முக்கியமான செய்தி~~~~
கர்நாடகத்தில் எந்த ஒரு தனி மனிதரும் நிலம் வாங்கி மனை போட்டு விற்பனை செய்ய முடியாது.
👉வீட்டு வசதி கூட்டுறவு சங்கங்கள் குறைந்த பட்சம் 500 நபர்களின் சொஸைட்டி உறுப்பினர்கள்
பட்டியல் கொடுத்தால்
RTC உள்ள நபர்கள் பெயரில் விவசாய நிலத்தை வாங்கி Urban Development Authority மூலம் ஒப்புதல் பெற்று அனைத்து உறுப்பினர்களுக்கும் வீட்டு மனை விநியோகம் செய்யலாம்.விற்பனை செய்யக் கூடாது..!!
👉ஒரு நகர் அமைக்க வேண்டுமெனில்,
அரசுக்கும் இலவயமாக இடம் ஒதுக்கி கொடுத்து பூங்கா,சாலைகள்,
வணிக வளாகங்கள் மற்றும் எதிர்கால கட்டமைப்புக்காக Civic Amenities இட ஒதுக்கீடு செய்தால் தான் கர்நாடகத்தில் அந்த நகர் அங்கீகரிக்கப்பட்ட நகர் ஆகும்.
👉ஒரு ஏக்கர் 43,560 சதுர அடி.இதில் கர்நாடக அரசு சட்டப்படி தோராயமாக 20,000 சதுர அடி தான் மனையாக விற்பனை செய்ய முடியும்.
👉தமிழகத்தில் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இன்னும் இரண்டு தலைமுறைக்கு தேவையான வீட்டு மனைகள் விவசாய நிலங்களை தமிழகம்  வாழ் அனைத்து அரசியல் கட்சியினரும் ஆக்கிரமிப்பு செய்து மனைகள் ஒதுக்கி வண்ண வண்ண கொடிகள் பறந்து கொண்டுள்ளது.
👉கர்நாடகத்தில் தேசிய நெடுஞ்சாலை களாகட்டும்,மாநில சாலைகளிலோ
வீட்டு மனை ஒதுக்கியிருப்பதை எங்கேயும் பார்த்திருக்க முடியாது.
தார் சாலை கண்டவிடமெல்லாம் சென்னைக்கு மிக அருகாமையில்....
விழுப்புரம் வரை விற்று விட்டனர்...
இனி ஆண்டவர்கள்[!!!]
தான் காப்பாற்ற வேண்டும்..

அரிமா.கு.புகழேந்தி
இயற்கை விவசாயி,
மைசூரு.

திங்கள், 5 செப்டம்பர், 2016

வீட்டுக்கு வீடு தோட்டம்....

நடுத்தர வருவாய் பெறும் மக் களிடையே இன்றைய மிகவும் முக்கிய தேவையான தினசரி காய்கறிகள் வாங்குவது பெரும் சுமையாக உள்ளது. சந்தையில் காய்கறி வரத்து இல்லாத காலத்தில் விலை சற்று அதிகரித்தும் வரவு அதிகம் உள்ள நிலையில் மிகவும் குறைந்த விலையில் விற்கும். ஆனால், சில ஆண்டுகளாக அன்றாடம் உணவுப் பொருளில் பயன்படும் காய்கறிகளின் விலை ஏறிய வண்ணமே உள்ளது. குறையும்போது மிகவும் குறைந்த பட்சமே குறைந்து விரைவில் மீண்டும் விலை ஏறிவிடுகிறது.
முக்கியமாக சேமிப்பில் சிறந்து விளங்கும் பெண்கள் காய்கறி விலையேற்றத்தின் காரணமாக சேமிக்கவழியில்லாமல் அவசரத் தேவைக்கு பணமின்றி திகைத்து நிற்கும் நிலையை அன்றாடம் காண நேர்கிறது. காய்கறித் தோட்டம் என்பது இன்று மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது, குறைந்த இடம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட் களைக் கொண்டே காய்கறிகளை விளைவித்து நச்சுக் கலப்பற்ற காய்கறிகளை நாமே விளைவிக்க லாம்.
ஊட்டச்சத்து வல்லுநர்கள் பரிந்துரை
காய்கறிகள் உணவில் ஊட்டச் சத்தை அதிகரிப்பதோடு மட்டு மல்லாமல், உணவையும் ருசியாக் குகின்றன. ஊட்டச்சத்து வல்லு நர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங் களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.
வீட்டுக் காய்கறித் தோட்டம்
மேற்கண்ட கருத்துகளை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான காய் கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார சீர் கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது.
மிகக் குறைவான இடத்தில் காய்கறி பயிரிடப்படுவதால் மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் கட்டுப்பாட்டை மேற் கொள்ள முடிகிறது. மேலும் பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினாலே போதுமானது. இதனால் காய்கறி களில் நச்சு இரசாயனங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.
இடம் தேர்வு செய்தல்
வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமையலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன் படுத்திக் கொள்ளவும் இது சுலப மாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொருத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொருத்தும் காய்கறி தோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய வேண்டும். காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்..
நிலம் தயார் செய்தல்
நிலத்தை 40 செ.மீ. ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். காய்கறித்தோல் பழத்தோல் கழிவு களை மண்ணில் இட்டு அதை உரமாக மாற்றவேண்டும்.
அட்டவணையில் கண்ட திட்டமுறையில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பத்தியிலும் சில பயிர்கள் இடைவிடாது இடம் பெறச் செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பத்தியிலும் ஒரு நெடுங்காலப் பயிரும், குறுகிய காலப் பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.
காய்கறி தோட்டத்தின்
பயன்கள்
முதலில் நம் குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றிக் கொள் ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது. எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச் சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடை யனவாகும்.
- சாரா
விடுதலை ஞாயிறு மலர், 16.7.16

சனி, 3 செப்டம்பர், 2016

வேளாண்மையில் பூச்சிக் கொல்லியாகப் பயன்படும் சாராயம்!

தேவைகளின் உச்சமே கண்டுபிடிப்புகளின் தோற்றமாகும். இதை மெய்ப்பிக்கும் விதமாக மகாராஷ்ட்டிர மாநில விவசாயிகள் பயிர்களை நாசமாக்கும் பூச்சிகளை விரட்டுவதில், பயிர்களைக் காப்பதில் தாங்கள் சந்தித்துவரும் இடர்பாடுகளிலிருந்து விடுதலை பெற முயன்றதன் விளைவாக, சாராயத்தால் இத்தொல்லைக்கு விடிவு கிடைக்கும் என்பதைக் கண்டிருக்கின்றனர். இராசாயன உரங்களின் அபரிமிதமான உபயோகத்தால், நிலம் தன் நல்லியல்பு குன்றி, குறைந்த அளவே விளைச்சல் தரும் சூழலையும் மாற்றிடும் இயல்பு சாராயத்திற்கு உண்டு என்பதை அனுபவ வாயிலாக அறிந்து பயனடைந்து வருகின்றனர்.


நாட்டு சாராயம், கள்ளு, மற்றும் மஹா என்னும்படியான போதைப் பானம் ஆகியவற்றில் ஒன்றை 100லிருந்து 120 மி.லி. வரை 15 லிட்டர் தண்ணீரில் கலந்து, தாவரங்கள் பூத்துப் பலன் கொடுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவற்றின் மீது தெளித்தால், அது பூச்சிகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதோடு, தாவரங்களின் வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஜிப்ராலிக் அமிலச் சுரப்பைத் தூண்டுவதால், வளர்ச்சியுடன் நல்ல விளைச்சலையும் தருகிறது என்பதைக் கண்கூடாகக் கண்டுள்ளனர்.

பூச்சிக்கொல்லிகளுக்கு நல்ல மாற்றாக இந்த (ஆல்கஹால்) சாராயம் உதவுகிறது என்று விவசாய நிபுணர்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு 10 அல்ல 12 முறை பூச்சிக்கொல்லிகளை தெளிக்க பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகின்றது. ஆனால், சாராயக்கலவை ஒரு குடுவை 180 மிலி ரூபாய் 25 முதல் 30க்குள் அடக்கமாகி விடுவதோடு விவசாயிகளுக்கு சுலபமாகவும் கிடைத்துவிடுகிறது.

மகாராட்டிர மாநிலத்தில் லாத்தூர், அஸ்மணாபாத், நான்டெட் பிரபாணி, யுவமால் மற்றும் பீட் மாவட்டங்களில் இம்முறை பரவலாக உபயோகத்தில் உள்ளது.

ஆதாரம்: ‘Open’ 21.3.2016 தகவல்: கெ.நா.சாமி
-உண்மை இதழ்,1-15.7.16

செவ்வாய், 7 ஜூன், 2016

விளைச்சலுக்கு உதவும் நுண்ணுயிரிகள்


உலக மக்கள் தொகை, இன்று, 740 கோடி. இது, வரும், 2050க்குள் மேலும், 200 கோடி கூடிவிடும். இந்த கூடுதல், 200 கோடி பேருக்கு தேவையான உணவு பயிர்கள் தேவை என்றால், பயிர் உற்பத்தி, 70 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை பெருகியிருக்க வேண்டும். ஆனால், தற்போது ஆண்டுக்கு, 1 சதவீதம் மட்டுமே பயிர் உற்பத்தி கூடி வருகிறது.
அழியும் நுண்ணுயிரிகள் பயிர் உற்பத்தியை பெருக்குவதற்காக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள் போன்றவை தரும் பலன்களைவிட, உபத்திரவங்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு வேறு பல மாற்று வழிகளை, விவசாய விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர். அதில் ஒன்று தான் நுண்ணுயிரிகள். மனிதனின் உடலில், 3 ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவற்றில் கணிசமானவை, உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. இதேபோல தான் தாவரங்கள் செழிக்கவும், பல நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் அழிக்கப்பட்டு விடுகின்றன.
இதை தடுக்க, விதையிலேயே, நல்ல நுண்ணுயிரிகள் கொண்ட திரவத்தை பூசிவிட்டால் என்ன என்று, அமெரிக்காவிலுள்ள இண்டிகோ நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது. ‘’தாவரங்களுக்கு உதவும் நல்ல நுண்ணுயிரிகளில், 40 ஆயிரம் நுண்ணுயிரிகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். இவற்றில் பல, இப்போது பரவலாக அழித்தொழிக்கப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும் உயிர்ப்பித்து விதைகளின் மேல் பூசி விடுவோம்,’’ என்கிறார், இண்டிகோவின் தலைவர் டேவிட் பெர்ரி.
விதைகள் மீது பூச்சு: தாவரம் சார்ந்த நுண்ணுயிரிகளை, இதற்கு முன் பலர் ஆராயந்துள்ளனர். என்றாலும், அவர்கள் மண்ணில் உள்ள நுண்ணுயிரி களையே ஆராய்ந்தனர். ஆனால், இண்டிகோ போன்ற சில நிறுவனங்களே, தாவரங்களுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகளை ஆராய்கின்றன.நுண்ணுயிரி பூச்சு செய்யப்பட்ட விதைகள், முளைவிடும்போதே அவற்றின் நற்பயன்களை அனுபவித்து வளர்கின்றன. விளைச்சலும், 10 சதவீதம் அதிகம் கிடைப்பதாக இண்டிகோ தெரிவிக்கிறது.
தவிர, நுண்ணுயிரியில் ஊறி வளரும் பயிர்கள், அதிக உப்புள்ள மண், சூடான பருவநிலை போன்றவற்றை சுதாரித்து வளர்வதோடு, குறைந்த நீர் இருந்தாலும் நல்ல வளர்ச்சி காண்கின்றன.விவசாய நாடான இந்தியாவிலும் இந்த முறை பின்பற்றப்பட்டால், உணவு உற்பத்தி நிச்சயம் விண்ணைத் தொடும்.
-விடுதலை,24.3.16

புதன், 18 மே, 2016

3 விதமான காய்கள் காய்க்கும் அதிசய செடி: வேளாண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு


புதுச்சேரி, ஜன. 9 
புதுவை கூடப்பாக்கம் பகுதியில் சேர்ந்த வேளாண். விஞ்ஞானி வேங்கடபதி. இவர் கனகாம்பரம், சவுக்கு, மிளகாய் ஆகியவைகளில் புதிய ரகங்களை கண்டு பிடித்து சாதனை படைத் தார்.
தற்போது அவரும், அவரது மகள் சிறீலட் சுமியும் இணைந்து ஒரு செடியில் கத்திரிக்காய், மிளகாய், தக்காளி ஆகிய 3 வகை காய்கள் காய்க்கும் நவீன செடியை கண்டு பிடித்துள்ளனர்.
அந்த செடிக்கு கலாம் கத்திரி என்று பெயர் சூட்டி உள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
சாதாரண கத்திரிக்காய் செடி 6 மாதம்தான் உயி ரோடு இருக்கும். இதை மாற்றி அவை 3 ஆண் டுகள் உயிரோடு இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.
சுண்டைக்காய் செடி வேர் பலமானது. நீண்ட காலம் வாழும் சக்தி உள் ளது. எனவே, கத்திரிக் காய் செடியையும், சுண் டைக்காய் செடியையும் ஒட்டு முறையில் சேர்த் தோம். மேலும் தக்காளி, மிளகாய் செடிகளை ஒட்டு முறையில் அதனோடு இணைத்தோம். இதன் மூலம் புதிய ரக கத்திரிக் காய் செடி உருவாகியுள் ளது.
ஒட்டு முறையில் உரு வாக்கிய  செடியில் ஒரு கிளையில் கத்திரிக் காயும், ஒரு கிளையில் மிளகாயும், மற்றொரு கிளையில் தக்காளியும் காய்க்கும் தறுவாயில் உள்ளது. இந்த செடிக்கு கலாம் கத்திரி என்று பெயர் சூட்டி உள்ளோம். உழவர் தினத்தில் முதல் அமைச்சர் ரங்கசாமி இந்த புதிய ரகத்தை வெளியிட அனுமதி கேட்டுள் ளோம்.
வீட்டில் நவீன ரக இந்த ஒரு செடி வளர்த் தால் ஒரு குடும்பத்துக்கு தேவையான கத்திரிக் காய்கள் 2 ஆண்டுகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
விடுதலை,9.1.16