புதன், 13 மார்ச், 2024

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பறவைகள் பலவிதம் (பறவைகள் கணக்கெடுப்பு’)

 

விடுதலை நாளேடு

பேராசிரியர் நம்.சீனிவாசன்

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகம் பச்சைப்பட்டு போர்த்திய பெரும் நிலம். எங்கு நோக்கினும் செடிகள், கொடிகள், மரங்கள்.
‘குயில் கூவிக் கொண்டிருக்கும்; மயில் ஆடிக் கொண்டிருக்கும்’ என்று இலக்கியத்தில் படித்ததை யெல்லாம் இங்கு கண்ணாரக் கண்டு களிக்கலாம்.
‘மெதுவாகச் செல்லவும்; மயில்கள் குறுக்கிடும்’ என்ற அறிவிப்புப் பலகை , இந்தப் பல்கலைக்கழகத்தைத் தவிர வேறு எங்கேயும் காண இயலாது.
ஓங்கி உயர்ந்த பெரு மரங்கள், தரத்தில் தேக்கு மரத்தை தோற்கடிக்கும் செம்மரங்கள், ஓயாது குரல் கொடுக்கும் மூங்கில் காடுகள், ததும்பி நிற்கும் நீர்நிலைகள் – இவையாவும் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளே இயற்கையின் அருட்கொடையாய் அமைந்திருக்கின்றன.
வளாகத்தில் விரிந்து கிடக்கும் தாவரக் கூட்டங்களுக்கு மத்தியில் விலங்குக் கூட்டங்களும் உண்டு;
மரத்திற்கு மரம் குரங்குகள் தாவும்;
அணில்கள் சுதந்திரமாய் விளையாடும்;
முயல்கள் உற்சாகமாய் குதிக்கும்;
கீரிப்பிள்ளைகள் அவசரமாய் ஓடும்;
உடும்புகள் நடுங்காமல் ஊறும்.
ஆனால் அவற்றையெல்லாம் கணக்கெடுக்கவில்லை.
‘இது பறவைகள் கணக்கெடுப்பு’;
‘விலங்குகள் கணக்கெடுப்பு அல்ல’ – என்றார்கள் அரசு அதிகாரிகள்.
தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு 2024 மார்ச் மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
குமரிப்புறா,
மாங்குயில்,
கதிர்க்குருவி,
அரசவால் ஈப்பிடிப்பான்
எனும் நான்கு வகை அரிய பறவைகள் கண்டறி யப்பட்டன.
வியப்பும் மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்பட்டன.

பறவையியல் வல்லுநர்கள் கவனமாகக் கணக் கெடுத்தனர்.
50 வகை பறவை இனங்கள் இருப்பதாகத் தெரிவித்தனர்.
ஒவ்வொரு பறவையின் பெயரையும் அறிவித்தனர்;
மொத்தம் 447 எண்ணிக்கைகள் இருப்பதாகக் கண்டறிந்து பதிவு செய்தனர்.
மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி மிதிஷி உத்தரவின் பேரிலும்,
பல்கலைக்கழக துணைவேந்தர் இராமச்சந்திரன் அறிவுரையின் பேரிலும்,
ஈவெட் இயக்குநர் மற்றும் பறவையியல் அறிஞர் முனைவர் இராஜ சதீஷ்குமார் வழிநடத்துதலிலும்,
மேனாள் மாவட்ட வன அலுவலர் முனைவர் செல்வம் முன்னிலையிலும்,
வீரமணி – மோகனா வாழ்வியல் ஆய்வு மய்ய இயக்குநர் பேராசிரியர் அசோக்குமார் ,

Director, Centre for energy environment and climate change , பேராசிரியர் கீர்த்தி வாசன், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, வனத்துறை அலுவலர்கள் இரஞ்சித், இளஞ்செழியன் ஆகியோருடன், இளம் பறவையியலாளர்கள் கண்மணி, செல்வின், சக்தி மற்றும் ஆர்வம்‌ கொண்ட மாணவ – மாணவியர்கள் 32 பேர் குழுவாக இணைந்து, பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்றனர்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக M.Sc., Biotechnology
M.Tech Environmental Engineering,
B.Tech Biotechnology ,
EEE மாணவியர்கள் கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.
பறவைக் கணக்கெடுப்பாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து,
02.03. 2024 மற்றும் 03.03.2024 ஆகிய இரண்டு நாட்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலையில் 6 மணிக்குத் தொடங்கி 9 மணி வரையிலும் மற்றும் மாலையில் 5 மணிக்குத் தொடங்கி 7 மணி வரையிலும் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.
1) மயில்= 13
2) மாடப்புறா =32
3) மணிப்புறா =5
4) செண்பகம் =4
5) சுடலை குயில் =1
6) குயில் =3
7) அக்கா குயில்=3
8) நாட்டு உழவாரன்=21
9) பனை உழவாரன்=8
10) செம் மூக்கு ஆள்காட்டி=2
11) சின்ன நீர் காகம்=2
12) இந்திய நீர் காகம்=2
13) சின்ன கொக்கு=21
14) மடையான்=10
15) வல்லூறு=2
16) கரும் பருந்து=3
17) வெண் மார்பு மீன் கொத்தி=2
18) கருப்பு வெள்ளை மீன் கொத்தி=1
19) சிறிய பஞ்சுருட்டான்=7
20) பனங்காடை=2
21) செம் மார்பு குக்கூறுவான்=12
22) பொன் முதுகு மரங்கொத்தி=2
23) பச்சைக்கிளி=32
24) மாங்குயில்=1
25) காட்டு கீச்சான் =1
26) கரிச்சான்=18
27) அரசவால் ஈ பிடிப்பான்=1
28) வால் காக்கை=11
29) காகம்=10
30) அண்டங்காக்கை=3
31) தையல் சிட்டு=12
32) சாம்பல் கதிர் குருவி=6
33) கதிர் குருவி=6
34) வெண்புருவ சின்னான் =4
35) சின்னான்=11
36) மைனா=25
37) கருஞ்சிட்டு=8
38) குண்டு கரிச்சான்=3
39) ஊதா தேன்சிட்டு=11
40) ஊர் தேன் சிட்டு=9
41) சிட்டுக்குருவி=17
42) கவுதாரி=3
43) வெண் புருவ வாலாட்டி=2
44) கருந்தலை மைனா=4
45) பழுப்பு கீச்சான்=35
46) செம்முக்கு பூங்குயில்=2
47) குமரி புறா=6
48) தவிட்டு குருவி =45
49) பெரிய தேன் சிட்டு=2
50) சிறிய நீல மீன் கொத்தி=1
50 இனங்களையும் கண்டு களித்து பதிவு செய்து பரவசம் அடைந்தனர்.
மொத்த பறவைகளின் எண்ணிக்கை=447
வானத்தில் போர் விமானங்கள் பறந்தால் அது மோசமான தேசம்;
பறவைகள் சிறகடித்தால் அது வாழ்வதற்கேற்ற வளமான நாடு.

மனிதனின் முதல் நண்பன் மரம்; மரத்தின் முதல் எதிரி மனிதன்.
பல்கலைக்கழகத்தில், மூங்கில் தோப்பிற்கு அருகேயுள்ள தென்னந்தோப்பில், அச்சமின்றி பச்சைக் கிளிகள் கூட்டம் கூட்டமாய் வாழ்கின்றன;
‘கீச் கீச் ‘ என்ற சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
பச்சைக்கிளிகள் வாழும் அப்பகுதியை மாணவர்கள்,
‘பசுங்கிளித் தோப்பு’ என்றே அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஒரு கவிதையில் குறிப்பிடுவார்கள் :
“கிளி வளர்த்தேன் – பறந்து விட்டது;
அணில் வளர்த்தேன் – ஓடிவிட்டது;
மரம் வளர்த்தேன் – இரண்டும் வந்துவிட்டது”
என்று மரங்களின் அவசியத்தை நயமாய்ச் சொல்லி இருப்பார்.
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாய் வீடு காடுகளே ஆகும்.
பொதுவாகவே பல்கலைக் கழக வளாகப் பகுதியை,
‘தஞ்சையின் நுரையீரல்’
‘ பசுமைப் பள்ளத்தாக்கு’
என்றே சூழலியலாளர்கள் பாராட்டி வருகின்றனர்.
கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்ற பறவையியல் வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது;
நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன; சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி மிதிஷி அனை வருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கி நன்றி தெரிவித்தார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் இயற் கைச் சூழல் – பசுமைப் பரப்பு இந்தியப் பல்கலைக்கழக பல்வேறு அமைப்புகளின் பாராட்டுதல்களைப் பெற் றிருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் களும் அவர்களின் பெற்றோர்களும் மட்டுமல்லாமல், பொதுமக்களும் வியந்து பாராட்டும் வகையில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்


விடுதலை நாளேடு

 ♦ 10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்

♦ முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு
♦ விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு
வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு!
2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சென்னை,பிப்.20- தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (19.2.2024) “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையில் ‘தமிழ் கனவுகள்’ என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகிறார்கள்.

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேளாண்துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இன்று (20.2.2024) 2024-2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உழவர் பெருமக்களை அரவ ணைக்கும் நிதிநிலை அறிக்கையாக இன்று தாக்கல் செய் யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

ரூ.16,500 கோடிக்கு பயிர்க் கடன்

2024 – 2025ஆம் ஆண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு, பூக்கள், பழங்கள், வேளாண் இயந்திரங்கள், விதைகள், வேளாண் பயிற்சி உள்ளிட்ட பலவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 16, 500 கோடிக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணைக்குட்டைகள், கசிவுநீர் குட்டை, புதிய குளங்கள் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் மதிப்பில் பனை விதைகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மின் இணைப்புக்கு மும்முனை மின்சாரக் கட்டணத் தொகையாக மின்வாரியத்துக்கு ரூ.7,280 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

வறட்சிக்கு ரூ.110.59 கோடி

வறட்சி தணிப்பிற்கான சிறப்புத் திட்டத்துக்கு ரூ.110.59 கோடி ஒதுக்கீடு.
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.
நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.
மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
எள் சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு

ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.
”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும்.
கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.
சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி நிதி ஒதுக்கீடு.
வறண்ட நிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கு ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்க ரூ.2.70 கோடி மானியம்.
கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு.
தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு
14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
‘மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்’ மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.
உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையுடன் டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.
முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப் பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
‘மண்ணுயிர் காப்போம்’ திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்.
இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க
100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப் படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்.
‘வேளாண் காடுகள் திட்டம்’ மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
2,482 கிராம ஊராட்சிகளுக்கு
கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில், மண்புழு உரம் ஊக்குவிக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.
“முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம்” கீழ் களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.
முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் மொத்தம் ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆடுதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.240 கோடி ஒதுக்கீடு
பயிற்சிபெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி ஒதுக்கீடு.
‘துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்’ அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு
ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும்.

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.
பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.
ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.
ஏற்றுமதிக்கு உகந்த ‘மா’ இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.
பன்னாட்டுத் தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு

நீரிழிவு நோயைக் கட்டப்படுத்த….

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

கிராம வேளாண் முன்னேற்றக் குழு

2482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு உருவாக்கிட ரூ.2.48 கோடி ஒதுக்கீடு.
மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டத்துக்காக ரூ.3.67 கோடி ஒதுக்கீடு.
அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நேரடி விற்பனை நிலையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.
செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

மரவள்ளிப்பயிரில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

உதகை ரோஜா பூங்காவில் 100 புதிய ரோஜா வகைகள் நடவு செய்யப்படும்.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும்.
ஈரோடு கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
டெல்டா வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டு மையம் ரூ.16.3 கோடியில் அமைக்கப்படும்.

கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி மானியத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.
உணவு பாதுகாப்பினை உணவு மானியத்துக்கு ரூ.10500 கோடி ஒதுக்கீடு.