வியாழன், 23 ஜூலை, 2015

"நெல்லுக்கு சொந்தம் கொண்டாடும் சீனாவின் முயற்சி முறியடிப்பு


புதுடில்லி, ஜூலை 6_ நெல் பயிர் தங்கள் நாட்டில் தான் உருவானது என்று கூறி அதற்கு காப்புரிமை பெற்று, சொந்தம் கொண் டாட சீனா மேற்கொண்ட முயற்சியை இந்திய விஞ் ஞானிகள் முறியடித்துள்ள தாக ஆராய்ச்சியாளர் நாகேந்திர குமார் தெரி வித்தார். நெல் பயிர் இந்தி யாவில்தான் உருவானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக, தில்லியை தலைமையிட மாகக் கொண்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறு வனத்தின், செடிகளுக்கான உயிரி தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத் தில் பணிபுரியும் தலைமை ஆராய்ச்சியாளர் நாகேந் திர குமார் சிங் கூறுகை யில், ""நெல் பயிர் இந்தி யாவில் உருவானது என்ற உண்மை எங்களது ஆராய்ச் சியின் மூலம் நிரூபிக்கப் பட்டது'' என்று தெரி வித்தார். இதுதொடர்பாக சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகளை வெளியிடும் "நேச்சர் சயின்டிஃபிக் ரிபோர்ட்ஸ்' பத்திரிகையில் ஆதாரங்களுடன் நமது விஞ்ஞானிகள் கட்டுரை எழுதியுள்ளனர். இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் நெல் பயிர் வளர்க்கப்பட் டது என்ற கருத்து கடந்த 20ஆம் நூற்றாண்டு வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட தாக இருந்தது. இதனிடையே, அமெ ரிக்காவைச் சேர்ந்த அறி வியலுக்கான தேசிய கல்வியகத்தில் 2011ஆம் ஆண்டு சீனா ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சீனாவில் நெல் தோன்றியதாக கூறப் பட்டது. மேலும் சீனாவின் யாங்ட்ஸ பள்ளத்தாக்கில் சுமார் 8,200- 13,500 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக நெல் பயிரிடப்பட்டது. அதுவே நெல் பயிரின் தோற்றம் என்று அந்த ஆராய்ச்சி யில் தெரிவிக்கப்பட்டது.
-விடுதலை,7.7.15

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக