வேளாண்மை(மருதம்) அறிவோம்

வியாழன், 22 பிப்ரவரி, 2024

2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்


விடுதலை நாளேடு
Published February 20, 2024

 ♦ 10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்

♦ முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு
♦ விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு
வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு!
2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்

சென்னை,பிப்.20- தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (19.2.2024) “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையில் ‘தமிழ் கனவுகள்’ என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகிறார்கள்.

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேளாண்துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இன்று (20.2.2024) 2024-2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உழவர் பெருமக்களை அரவ ணைக்கும் நிதிநிலை அறிக்கையாக இன்று தாக்கல் செய் யப்பட்டுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

ரூ.16,500 கோடிக்கு பயிர்க் கடன்

2024 – 2025ஆம் ஆண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.42,281.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு, பூக்கள், பழங்கள், வேளாண் இயந்திரங்கள், விதைகள், வேளாண் பயிற்சி உள்ளிட்ட பலவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 16, 500 கோடிக்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணைக்குட்டைகள், கசிவுநீர் குட்டை, புதிய குளங்கள் போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பனை சாகுபடியை ஊக்குவிக்க ரூ.10 லட்சம் மதிப்பில் பனை விதைகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மின் இணைப்புக்கு மும்முனை மின்சாரக் கட்டணத் தொகையாக மின்வாரியத்துக்கு ரூ.7,280 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

வறட்சிக்கு ரூ.110.59 கோடி

வறட்சி தணிப்பிற்கான சிறப்புத் திட்டத்துக்கு ரூ.110.59 கோடி ஒதுக்கீடு.
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
10 லட்சம் வேப்ப மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு.
நடப்பு ஆண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.
மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.
எள் சாகுபடியை அதிகரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு.

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு

ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு உதவ ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு.
ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு.
”ஒரு கிராமம் ஒரு பயிர்” திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம் அமைக்கப்படும்.
கன்னியாகுமரியில் தேன் பொருட்களுக்கு பரிசோதனை கூடம் அமைத்து பயிற்சி வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு.
சர்க்கரை ஆலைகளை மேம்படுத்த ரூ.12.4 கோடி நிதி ஒதுக்கீடு.
வறண்ட நிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கு ரூ.3.64 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்க ரூ.2.70 கோடி மானியம்.
கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.73 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு.
தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு
14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு.
‘மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்’ மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு.
உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையுடன் டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும்.
முந்திரி சாகுபடியை அதிகரிக்க ரூ.3.36 கோடி ஒதுக்கீடு.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப் பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு.
‘மண்ணுயிர் காப்போம்’ திட்டத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு. இதன்மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்.
இயற்கை விவசாயத்துக்கு இயற்கை உரம் தயாரிக்க
100 குழுக்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப் படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம்.
‘வேளாண் காடுகள் திட்டம்’ மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு!
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடனுக்கான வட்டி மானியத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
2,482 கிராம ஊராட்சிகளுக்கு
கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில், மண்புழு உரம் ஊக்குவிக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.
“முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம்” கீழ் களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.
முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் மொத்தம் ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு.
ஆடுதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
எண்ணெய் வித்துப் பயிர்களின் சாகுபடியை விரிவாக்கம் செய்திட ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.240 கோடி ஒதுக்கீடு
பயிற்சிபெற்ற பண்ணை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைத்திட ரூ. 2.40 கோடி ஒதுக்கீடு.
‘துவரை சாகுபடிப் பரப்பு விரிவாக்க இயக்கம்’ அறிமுகம். துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூ. 17.50 கோடி நிதி ஒதுக்கீடு
ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும்.

நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.
பகுதிசார் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியினை ஊக்குவிக்க ரூ.2.70 கோடி நிதியில் விவசாயிகளுக்கு நடவுச்செடிகள் வழங்கப்படும்.
ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.
ஏற்றுமதிக்கு உகந்த ‘மா’ இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.
பன்னாட்டுத் தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு

நீரிழிவு நோயைக் கட்டப்படுத்த….

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

கிராம வேளாண் முன்னேற்றக் குழு

2482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு உருவாக்கிட ரூ.2.48 கோடி ஒதுக்கீடு.
மிளகாய் பயிர் ஊக்குவிப்பு திட்டத்துக்காக ரூ.3.67 கோடி ஒதுக்கீடு.
அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நேரடி விற்பனை நிலையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.
செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு.

மரவள்ளிப்பயிரில் மாவுப் பூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.
வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு
சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.
புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.
புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.
ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.

உதகை ரோஜா பூங்காவில் 100 புதிய ரோஜா வகைகள் நடவு செய்யப்படும்.
விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும்.
ஈரோடு கள்ளக்குறிச்சி, தர்மபுரி மாவட்டங்களுக்கு 8 மஞ்சள் வேக வைக்கும் இயந்திரங்களும் 5 மஞ்சள் மெருகூட்டும் இயந்திரங்களும் ரூ. 2.12 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
டெல்டா வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு
டெல்டா மாவட்டங்களில் 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி” “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
பண்ருட்டியில் பலா மதிப்பு கூட்டு மையம் ரூ.16.3 கோடியில் அமைக்கப்படும்.

கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க 16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி மானியத்துக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொல்லிமலை மிளகு, புவனகிரி மிதிபாகற்காய், ஐயம்பாளையம் நெட்டை தென்னை, கண்வலிக்கிழங்கு விதைகள், சத்தியமங்கலம் செவ்வாழை, செஞ்சோளம், செங்காந்தள் விதை, திருநெல்வேலி அவுரி ஆகிய வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு.
உணவு பாதுகாப்பினை உணவு மானியத்துக்கு ரூ.10500 கோடி ஒதுக்கீடு.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:36 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நிதிநிலை அறிக்கை

திங்கள், 29 மே, 2023

வேளாண்மையில் ஒரு புது திருப்பம் வட்டாரத்துக்கு ஒரு வேளாண் அறிவியலாளர் தமிழ்நாடு அரசு ஆணை

  Viduthalai  May 23, 2023  தமிழ்நாடு,

சென்னை, மே 23 தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன் னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வேளாண்மை, தோட்டக்கலை பயிர்களில் வெளியிடப்பட்ட உயர் மகசூல் ரகங்கள், சாகுபடி தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கான பயிர் பாதுகாப்பு முறைகள், நவீன எந்திரங்கள் மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கான யுக்திகள் போன்ற வற்றுக்கு அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு நேரடி யாக வழங்குவதற்காக வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற் றுக்கு ஒரு வேளாண் அறிவியலாளர் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த அறிவிப்பை செயல் படுத்தும் விதத்தில், இதற்கான கடிதத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பதிவா ளருக்கு (கோயம்புத்தூர்) வேளாண்மை உற்பத்தி ஆணையர் சமய மூர்த்தி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- வேளாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும், நவீன அறிவியல் ரீதியிலான ஆலோசனைகளையும் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு நேரடி யாக வழங்குவதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து, ஒரு வேளாண் அறிவியலாளர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் பொறுப்பு அலுவலராக பணி அமர்த்துவதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.

இவர்கள் அந்த வட்டாரத்தில் பெய்யும் மழை, மண்ணின் தன்மை, பயிர் சாகுபடி, கடந்த ஆண்டில் பூச்சி மற்றும் நோய் தாக்கிய விவரங்கள், பயிரில் இருந்து கிடைக்கும் மகசூல், விற்பனை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களை சேகரித்து, அந்த வட்டாரத்தில் விவ சாயிகள் லாபம் தரும் வகை யில் மகசூல் பெற மாற்றுப் பயிர்களை உள்ளடக்கி பயிர் சாகுபடி திட்டம் ஒன்றை தயாரித்து அதை விவசாயிகளுக்கு அறிவு ரையாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:04 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அரசு ஆணை, வேளாண் அறிவியலாளர்

புதன், 3 மே, 2023

வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்

Viduthalai  March 22, 2023  ஆசிரியர் அறிக்கை, தமிழ்நாடு,

 தொடரட்டும் உழவர் புரட்சி - தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி!

aaaaa

மூன்றாவது முறையாக வேளாண் துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை என்பது எங்குமில்லாத முன்னுதாரணம். விவசாயம் என்பது 'பாவ தொழில்' என்ற மனுதர்மத்திற்கு எதிராக விவசாய நலனில், விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டுவதுதான் 'திராவிட மாடல்' ஆட்சி என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த சுமார் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் ‘திராவிட மாடல்' ஆட்சியில், தமிழ்நாடு பல துறைகளில் ஓர் ‘அமைதிப் புரட்சியை' சந்தித்து மகிழ்ந்து வருகிறது. வாழும் வயிற்றிற்கெல்லாம் சோறிடும் மிக இன்றியமை யாத துறைதான் வேளாண்மைத் துறை; அதுமட்டுமல்ல, மனித நாகரிகத்தின் திருப்பமும் வேளாண்மையே ஆகும்.

வேளாண் என்பது மனிதகுலத்தின் 

வளர்ச்சிக்கு அடையாளம்!

காட்டுமிராண்டித்தனமாய் அலைந்து திரிந்து, உணவை வேட்டையாடிச் சேகரித்த தொடக்கால மனித குலம், பிறகு நாகரிகம் அடைந்ததின் அடையாளமே வேளாண்மைத் துறை.

மற்றவர்கள் நாடோடிகளாக (Nomadic) இருந்த நிலையை மாற்றி அவர்களை இருப்புக் கொள்ளச் செய்த புத்தாக்கம் தான் - நிலத்தை உழுது பயிரிட்டு மனித குலத்தைப் பட்டினியிலிருந்து பாதுகாத்துவரும் துறை வேளாண்மைத் துறை!

1

அத்துறையை மேலும் வளப்படுத்தி இன்றைய அறிவியல், மின்னணுவியல் வளர்ச்சியைப் புகுத்தி, புதிய ஆக்கப்பூர்வ சாதனைகளைச் செய்து, நமது வேளாண் பெருமக்களாக உள்ளவர்கள் ‘கடனிலே பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனிலேயே மறைந்து, தனக்குப் பின்வரும் சந்ததியினருக்கும் கடனையே' விட்டுச் செல்லும் பாரம்பரிய பரிதாப நிலைக்கு முடிவு கட்டி, தமிழ்நாட்டு வேளாண் பெருமக்களின் வாழ்வில் புதுவசந்தத்தை உருவாக்கவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முன் னெடுத்த குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று!

மூன்றாம் முறையாக வேளாண் பட்ஜெட்!

பொது பட்ஜெட்டிலிருந்து வேளாண்மையைத் தனியே பிரித்து, அதற்கென்று உள்ள வேளாண் துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் 3 ஆவது முறையாக வேளாண்மைக்கான தனி பட் ஜெட்டை அளித்து, அத்துறையில் உள்ள நம் உழைக்கும் விவசாயிகள் அகமும் முகமும் மலர்ச்சி அடைய, பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி - முதலமைச்சர் வழிகாட்டுதல்மூலம் சாதனை படைத்து வரும் சரித்திரத்தில் பொன்னேடுகளைப் பதித்து வருகிறது ஆட்சி.  அனைவரது வாழ்த்துகளும், பாராட்டுகளும் முதலமைச்சருக்கும், வேளாண் துறை அமைச்சருக்கும், ஒத்துழைத்தோருக்கும் உரியதாகும். ஓர் இனிய ஒன்பான் சுவை மிகுந்த உணவுபோல வேளாண் பெருமக்களுக்கு சமைத்துத் தந்துள்ளார் - பல முக்கிய வளர்ச்சித் திட்டங் களை அறிவித்தும் அவற்றிற்குரிய நிதி ஒதுக்கீடு செய்தும்!

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கிய உழவர் சந்தையால் உழவர்கள் பயன்பெற்றனர்; பொது மக்களும் இலாபம் அடைந்த நிலையை அறவே மறந்து, அரசியல் வன்மம் காரணமாக அந்த உழவர் சந்தையை மூடு விழா செய்தனர் - மூலையில் தள்ளப்பட்ட முந்தைய ஆட்சியினர்.

அவற்றைத் திறந்ததோடு, விரிவாக்கி, அங்கே கூடும் விவசாயிகள், விளைபொருள்களை வாங்கி மகிழும் மக்கள், பல்வேறு வசதிகளை - கிராமத்திலிருந்து வரும் வேளாண் பெருமக்களுக்கான உணவு விடுதி வசதி உள்பட செய்து தருவோம் என்ற அமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பும் நம் வேளாண் மக்களை, வளர்ந்துவரும் விவசாய நாடுகளுக்கு அழைத்துச் சென்று, புதிய அறிவியல் வளர்ச்சிகளைப் புரிந்து, புகுத்தி, தங்களையும், நாட்டினையும் வளர்ச்சிப் பாதை நோக்கி வேக நடை போட பல்வேறு திட்டங்களை அறிவித்திருப்பது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டானது ஆகும்!

பாராட்டி எழுதுவதற்கு எண்ணற்ற அம்சங்கள் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பலப்பல உள்ளன.

‘அகல உழுவதைவிட ஆழ உழுவதுமேல்' என் றொரு வேளாண் பழமொழி உண்டு. ஆழத்திலும், அகலத்திலும் இரண்டிலுமே உழுதுள்ளது இவ்வாண்டு இந்தப் பட்ஜெட்!

நமது ‘திராவிட மாடல்' ஆட்சியில் - இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2023-2024) செம்மொழி - எம்மொழியின் இலக்கிய மேற்கோள் மணம் வீசுகிறது!

ஒருபோதும் ‘‘பழைய பஞ்சாங்கமாய்''  வேளாண்மை விளங்காமல், மாறிவரும் அறிவியல், மின்னணுவியல் சூழலுக்கு ஏற்ப, அத்துறையில் அதிக வேகமான, நுட்ப மான தொழில்நுட்பவியலைப் புகுத்திடும் திட்டங்கள் எவரையும் திகைக்க வைக்கக் கூடியவை; திக்கெட்டும் ஆட்சியின் சாதனை என்ற புகழ் ஒளியைப் பாய்ச்சி பரப்பக் கூடியவை.

எத்தனை எத்தனை வளர்ச்சித் திட்டங்கள்!

1. சாகுபடி பரப்பளவு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிப்பு

2. இரண்டு ஆண்டுகளில் 1.50 லட்சம் புதிய மின் இணைப்புகள்

3. பயிர்க் காப்பீட்டு மானியத்திற்கு 2,337 கோடி ரூபாய்  ஒதுக்கீடு

4. தண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவ 450 கோடி ரூபாய்

5. நெல் குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத் தொகை

6. 10 லட்சம் குடும்பங்களுக்குப் பழச்செடிகள் வழங்கல்

7. எல்லாவற்றிற்கும் மேலாக உணவு தானிய உற்பத்தி 127 லட்சம் டன் இலக்கு

8. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் விருது!

‘திராவிட மாடல்' என்பது சமூகநீதி - வேளாண்மை மக்களுக்கு சமூகநீதியை பல வகைகளிலும் இந்த பட்ஜெட் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. பலரை தொழில் முனைவோர்களாக ஆக்கி, உயர்த்திட அடிக்கட்டுமானத்தை ஆழமாக்கிடும் தொலைநோக்குத் திட்டங்கள் இதில் துல்லியமாகப் பளிச்சிடுகின்றன!

மனுதர்மம் என்ன கூறுகிறது?

சனாதனத்தின் சாசனமான மனுதர்மத்தில் (அத்தி யாயம் 10; சுலோகம் 84)

‘‘சிலர் பயிரிடுதலை நல்ல தொழில் என்று நினைக் கிறார்கள்; அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக் கப்பட்டது. ஏனெனில்,  இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும், மண்வெட்டியும் பூமியையும், பூமியில் உண்டான பலப்பல ஜந்துக்களையும் வெட்டுகிற தல்லவா!''

இதைவிட பகுத்தறிவிற்கும், சமூக வளர்ச்சிக்கும் விரோதமான பிற்போக்குக் கருத்தும் கலாச்சாரமும் வேறு உண்டா?

திராவிடத் தத்துவம் சனாதனத்திற்கு நேர் விரோத மானது.

‘உழுதுண்டு வாழ்வோர் உலகத்தோர்க்கு அச்சாணி' என்பதுதானே அறிவுடன் கூடிய சுயமரியாதைக் கருத்து. (திராவிட கருத்தியல்). அந்த நமது ஒப்பற்ற பண்பாட் டினை உலகறியச் செய்ய வித்தூன்றி, வேளாண் துறை யில் ஓர் அமைதிப் புரட்சியுடன் தொடக்கம் - தொடரட்டும்!

தொடரட்டும் உழவர் புரட்சி!

‘‘பாராட்ட வார்த்தைகளே இல்லை'' என்று பகுத்தறிவு உள்ளோரும், வன்மம் இல்லாது வாழ்த்துவோரும் நிச்சயம் கூறும் வகையில் இப்பட்ஜெட் உள்ளது!

தொடரட்டும் உழவர் புரட்சி!

தொடரட்டும் ‘திராவிட மாடல்' ஆட்சி!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

22.3.2023 

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:47 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர் அறிக்கை, தனி பட்ஜெட், வேளாண் துறை

செவ்வாய், 2 மே, 2023

தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன அம்சங்களைக் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்

  Viduthalai  March 21, 2023  அரசு, தமிழ்நாடு,

👉தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்        

👉தகவல் பரிமாற்றக் குழு, பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

👉நேரடி நெல் கொள் முதல், விவசாயிகளுக்குப் பரிசு உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்படும்


16
வேளாண் நிதி நிலை அறிக்கையில் சிறப்பான அம்சங்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன அம்சங்களைக் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

14

சென்னை, மார்ச் 21 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் இன்று (21.3.2023) காலை 10 மணிக்குக் கூடியதும், சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றுவார் என அறிவித்தார். இதையடுத்து அமைச்சர் இத்துறைக்கான 83 பக்க நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார். 

அவரது உரை வருமாறு:

உழவர் பெருமக்கள் உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறவேண்டும், வர்த்தக ரீதியாக வருமானம் ஈட்ட வேண்டும், அறிவியலையும் உயர்ந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, மகசூலில் சாதனைகள் புரியவேண்டும் என்கிற அடிப்படையில்தான் சென்ற இரண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

வேளாண்மைத் துறையில் சவால்கள் 

தொழிற்சாலைகளுக்குத் தேவையான இடுபொருட்களைப் போதிய அளவுக்கு விளைவித்துத் தருவதும், வேளாண்மைத் துறையின் கடமை. இவற்றையெல்லாம் மனதில் வைத்து, 2021-2022 ஆம் ஆண்டில் பல தொலை நோக்குத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதன் காரணமாக மொத்த சாகுபடிப் பரப்பு, ஒரு இலட்சத்து 93 ஆயிரம் எக்டர் அதிகரித்து, மொத்தமாக 63 இலட்சத்து 48 ஆயிரம் எக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

மண் வளம் காக்கும் பணிகளால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-2022ஆம் ஆண்டில், 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை அடையப்பெற்றது. இது 2020-2021 ஆம் ஆண்டைவிட 11 இலட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதல் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

 முதலமைச்சர் அவர்கள், 2021 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதியன்றும், 2022 ஆம் ஆண்டில், 19 நாட்கள் முன்னதாக, மே 24 ஆம் தேதியன்றும் மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததனால், தஞ்சைத் தரணிக்கு தடையில்லாமல் நீர் கிடைத்து, வயல்களெல்லாம் நெல் பயிரினால் பச்சை தொற்றிக்கொண்டு பரவசமடைந்தன. இதனால், 2022-2023 ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நிகழ்ந்து, சாதனை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் நிகழாத சாதனை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

 முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக ஒரு இலட்சத்து அய்ம்பதாயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கி, சாதனை படைத்ததன் விளைவாக, வயல்களில் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ந்து வருகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்து, 2021-2022 ஆம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலமாக 'அக்ரி கிளினிக்', வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன.

நெல் மட்டுமின்றி, பயறு வகைகளும், கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு 195 ரூபாய் கூடுதலாக வழங்கி, கொள்முதல் நிகழ்த்தப்படுகிறது. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள், மின்னணு சந்தைகள் (மீழிகிவி), ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசால் 1,695 கோடி ரூபாய் காப்பீட்டுக் கட்டண மானியமாக வழங்கப்பட்டு, ஆறு இலட்சத்து 71 ஆயிரம் விவசாயிகளுக்கு இதுவரை 783 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு வடகிழக்குப் பருவமழை, 2023 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 82 ஆயிரம் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக 163 கோடியே 60 இலட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் காடுகள் உருவாக்குவது இயற்கையை மேம்படுத்தவும், மண்மீது பசுமைப் போர்வை போர்த்தி, பூமியை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் குளிர்விப்பதற்காகவும் தான். அது கணிசமான அளவிற்கு வருவாயை ஈட்டித் தரும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு, சந்தனம், செம்மரம், மகோகனி, தேக்கு போன்ற 77 இலட்சம் உயர் இரக மரக் கன்றுகள் வழங்கப்பட்டு 30,000 ஏக்டர் பரப்பில் நடப் பட்டுள்ளன.

மின்னணு வேளாண்மையில், விதையில் தொடங்கி, விற்பனை வரை, 22 முக்கிய வேளாண் சேவைகள், 'உழவன் செயலி' மூலம் நல்ல முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மைத் துறை

வரும் ஆண்டில் தமிழ்நாட்டில் 127 இலட்சம் மெட்ரிக் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான இலக்கை அடைவதற்கு மேற்கொள் ளப்படவிருக்கின்ற நடவடிக்கைகளையும், திட்டங்களைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒவ்வொரு சிற்றூரும் தன் தகுதிக்கேற்ப தன்னிறைவு அடைய முடியும். தண்ணீர் வளத்திற்கு ஏற்பவும், மண்ணின் வளத்திற்கு ஏற்பவும், அந்தச் சிற்றூரில் வேளாண்மை முழு மையாக வளர்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதி களையும், வேண்டிய மற்ற  பணிகளையும் மேற்கொள்வ தற்காக உருவாக்கப்பட்ட திட்டமே, இத்திட்டம். 

வரும் ஆண்டில் இத்திட்டம் 2,504 கிராம ஊராட்சிகளில் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

 ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், தென்னை மரங்கள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங் கன்றுகள் வீதம் மொத்தம் 15 இலட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக 2,504 கிராமப் பஞ்சாயத்துகளில் வழங்கப்படும்.

தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்

2023 ஆம் ஆண்டை பன்னாட்டு சிறுதானிய ஆண்டாக அய்க்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அய்ந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இயக்கத்தில், வரும் ஆண்டில், தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றி ணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும். 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும்.

மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு "சிறுதானிய திருவிழாக்களும்" இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும்.

 வரும் ஆண்டில், ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் 82 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

விவசாயிகளுக்குப் பரிசு

 நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும், அய்ந்து இலட்சம் ரூபாய் பரிசினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அனைத்துப் பயிர்களுமே அரவணைக்கத்தக்கவை என்பதை அடிப்படையாகக் கொண்டு, நெல்லுக்கு வழங்கி வந்ததை, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில், வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா அய்ந்து இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

அதேபோல, உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல், விருதுகள் வழங்கப்படும்.

வேளாண்மை சார்ந்த பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற கல்வியைப் பயன்படுத்தி சொந்தக் காலில் நிற்கவும், தொழில் முனைவோராகப் பரிணாம வளர்ச்சியடையவும், வரும் ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விதை உரிமம், உர உரிமம், பூச்சி மருந்து உரிமம் ஆகியவை தேவைக்கேற்ப வழங்கப்படும்.

வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் மண்ணும், நீரும் நச்சுத் தன்மையடைந்து நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இயற்கையான எருவைப் பயன்படுத்தி இரசாயன உரங்கள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம்  முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 32 மாவட்டங்களில், 14,500 எக்டர் பரப்பில், 725 தொகுப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க, சான்றுக் கட்டணத்திற்கு 10,000 எக்டருக்கு மானிய உதவி அளிக்கப்படும். வரும் ஆண்டில் இதற்கென, 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

அங்கக வேளாண்மையின் கீழ் கொண்டு வருவதற்கு சாத்தியமான பகுதிகளைக் கண்டறிவதற்கு, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும், அடிப்படைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

"நம்மாழ்வார் விருது"

அங்கக வேளாண்மையில்  நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் "நம்மாழ்வார்" பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது அய்ந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

தகவல் பரிமாற்றக்குழு

விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்புகள், மானியங்கள், பூச்சி-நோய் தாக்குதல் போன்ற தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வட்டார அளவில் விவசாயிகளைக் கொண்டு "வாட்ஸ்அப்" குழு உருவாக்கப்படும். இக்குழுவில் அனைத்து குக்கிராமங்களிலிருந்தும், விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக  வட்டார வேளாண்மை உதவி இயக்குநரும், தோட்டக்கலை உதவி இயக்குநரும் செயல்படுவார்கள்.

ஒரு தளம்-பல பயன்கள்

உழவர் நலன் சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டப்பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு சென்று, பல்வேறு ஆவணங்களை தனித்தனி படிவங்களில் தரவேண்டியுள்ளது. இத்தகைய நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கிக் கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து, கணினிமயமாக்கி புதிய இணையதளமான GRAINS' (Grower Online Registration of Agriculture Inputs System) அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும்(One Stop Solution) கிடைக்கும்.

பருத்தி இயக்கம்

வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4 இலட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்தும் வகையில், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

வரும் ஆண்டில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை, திருச்சி  மாவட்டம் பச்சைமலை, தருமபுரி மாவட்டம் வத்தல் மலை, சித்தேரி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, ஈரோடு மாவட்டம் தாளவாடி, பர்கூர், குதியாலத்தூர் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் உதவும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையானது, பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, பெரும் பல் நோக்கு கூட்டுறவு சங்கங்கள்(LAMPS),  தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து செயல்படுத்தப்படும்.

சர்க்கரைத் துறை 

தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, 2022-2023 அரவைப் பருவத்தில், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,821 ரூபாய்க்கு மேல் கூடுதலாக 195 ரூபாய் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் 253 கோடி ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

பத்து இலட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம்

வரும் ஆண்டில், பத்து இலட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு 15 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும்.

2023ஆம் ஆண்டை பன்னாட்டு சிறுதானிய ஆண்டாக அய்க்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அய்ந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது.

உழவர்களுக்கு அயல்நாட்டில் பயிற்சி

அயல்நாடுகள் சிலவற்றில் உயர் இரக தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தித்திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அங்கிருக்கும் தொழில் நுட்பங்களை நம் மாநில உழவர்களும் அறிவது, அவர்களுக்குள் ஊக்கத்தை உண்டாக்கும்.இத்திட்டத்திற்கென ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா

பாடப் புத்தகங்களில் படமாகவும், ஊடகங்களில் காணொலியாகவும் கண்ட வயல்களை, தோப்புகளை, தோட்டங்களை, பாசனக் கிணறுகளை, பழ மரங்களை, மாணவர்கள் நேரடியாக காண வேண்டுமென்பதற்காகவும், வேளாண்மையின் மகத்துவத்தை அவர்கள் அறிந்து, உணர்ந்து, தெளிந்து, தேற வேண்டுமென்பதற்காகவும், பண்ணைச் சுற்றுலா கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு இயந்திர பணிமனைகளில் ஒரு கோடி செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

உழவர் சந்தைகளைப் புதுப்பித்தல்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 உழவர் சந்தைகள் தமிழ்நாட்டில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகின்றன. இதனால், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, சராசரியாக நாளொன்றுக்கு 8,000 விவசாயிகள், மூன்று இலட்சம் நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.

மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டு, இரண்டு கல்லூரிகளுடன் தளிராக முளைவிடத் தொடங்கிய இப்பல்கலைக்கழகம், இன்று 18 அரசு உறுப்புக் கல்லூரிகள், 28 தனியார் இணைப்புக் கல்லூரிகள், 40 ஆராய்ச்சி நிலையங்கள், 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் என்று ஆல் போல் தழைத்து, செழித்து, நிழல் பரப்பி வருகிறது. அனைத்துப் பரிமாணங்களிலும் வளர்ச்சியடைந்து உலகளாவிய ரீதியில் இது புகழ்மிக்க கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. இப்பல்கலைக்கழகத்திற்கு, வரும் ஆண்டு 530 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

நேரடி நெல் கொள்முதல்

2022-2023 குறுவை, சம்பா கொள்முதல் பருவத்தில் (ரிவிஷி) இதுவரை 3 இலட்சத்து 73 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 27 இலட்சத்து 23 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 5,778 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் ஆண்டு நெல் கொள்முதல் செய்ய சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடுதலாக 100 ரூபாயும், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடுதலாக 75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் 

வரும் ஆண்டில், 6,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை வள மேலாண்மைப் (NRM) பணிகளான தடுப்பணை, பண்ணைக் குட்டைகள், கசிவு நீர்க்குட்டைகள், புதிய குளங்கள், கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள், கல் வரப்பு, மண் வரப்பு, தனிநபர் கிணறு, சமுதாயக் கிணறு, பால் சேகரிப்பு மய்யம், உணவு தானியக் கிடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிட 19,400 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் நிதி நிலை அறிக்கையில் கூறியுள்ளார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:15 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: வேளாண் நிதி நிலை

ஞாயிறு, 19 மார்ச், 2023

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண்மை கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

 

  March 15, 2023 • Viduthalai

சென்னை மார்ச் 15-  வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக் கும் வகையிலும் ‘தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023’-அய்  (TamilNadu Organic Farming Policy) முதலமைச்சர் மு.,க.ஸ்டாலின் நேற்று (14.2.2023) வெளியிட்டார். 

ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதி கரிப்பது அங்கக வேளாண்மை கொள்கையின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: 

2021-2022ஆ-ம் ஆண்டுக் கான வேளாண்மை - உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், ‘அதிக அளவு பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள், மண் புழுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து மண் வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப் பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய, இயற்கை வேளாண் விளை பொருட்களின் தேவை அதி கரித்துள்ளதோடு விழிப்புணர் வும் அவசியமாகி உள்ளது. இவற்றை கருத்தில்கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர் பான பணிகளை சிறப்பு கவனத் துடன் செயல்படுத்துவதற்காக, வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப் பிரிவு உருவாக்கப் படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

அதன் முதல்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற் காக வேளாண்மை - உழவர்நலத் துறை செயலர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக் கப்பட்டுள்ளது. அக்குழுவின் மூலம் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல் திட்டம் மற்றும் விதி முறைகள் உருவாக்கப்பட்டுள் ளன. அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாடு விவசாயிகள் இடையே அதி கரித்தல், நிலங்களில் ரசாயன இடுபொருட்களின் பயன் பாட்டை படிப்படியாக குறைத்து, இயற்கை இடு பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.

கொள்கையின் நோக்கம்: 

அங்கக வேளாண்மை கொள்கை மூலம் மண் வளம், வேளாண் சூழலியல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாது காத்தல் மற்றும் நிலைத்திருக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். பாதுகாப்பான, ஆரோக் கியமான மற்றும் சுற்றுச்சூழ லுக்கு உகந்த உணவை வழங் குதல், அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்தி, அங்கக வேளாண்மை நடைமுறைகள் விரிவாக்கம் செய்யப்படும். அங்கக சான் றளிப்பு முறைகள், நச்சுத் தன்மை பகுப்பாய்வு நெறி முறைகளை வலுப்படுத்துதல், பண்ணையில் உற்பத்தி செய் யப்படும் அல்லது பண்ணைக்கு அருகில் உற்பத்தி செய்யப்படும் தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடுபொருட்கள் ஊக்குவிக்கப்படும். மேலும், சந்தை ஆலோசனைகள், சான் றிதழ் ஆலோசனைகள் வழங் கப்படுவதுடன் ஏற்றுமதியை ஊக்குவித்து, விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது அங் கக வேளாண்மை கொள்கை யின் நோக்கங்களாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:17 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இயற்கை வேளாண்மை

சனி, 18 மார்ச், 2023

45 கிலோவில் காச்சில் கிழங்கு

 

  January 11, 2023 • Viduthalai

அருமனை, ஜன. 11- கன்னியா குமரி, அருமனை அருகே உள்ள மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிர தீஸ். இவர் தனது நிலத் தில் பலவிதமான கிழங்கு வகைகளை பயிரிட்டு வருகிறார். அதில் ஒன்று காச்சில் கிழங்கு. இந்த கிழங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். அதன்படி அறுவடைக்கு தயாரான காச்சில் கிழங்கு வெட்டி எடுக்கும் பணியில் பிர தீஸ் ஈடுபட்டார். அப்போது, கிழங்கு பூமிக்கு அடியில் ஆழமாக சென்றதை கண்டார். சுமார் 8 அடி ஆழத்தில் பல பிரிவு களாக சென்றிருந்த கிழங்கு முழுமையாக உடையா மல் பிரதீஸ் அறுவடை செய்தார். அதன் எடை 45 கிலோ இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். வழக்கமாக இந்த வகையை சேர்ந்த கிழங்கு ஒன்று அதிகபட்சமாக 20 கிலோ இருக்கும். ஆனால் இந்த கிழங்கு 2 மடங்கு எடையில் உள்ளது. இந்த கிழங்கை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த் துச் சென்றனர்.


இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:19 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கிழங்கு

செவ்வாய், 26 ஜூலை, 2022

சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள மியாவாக்கி காடுகளால் ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் உற்பத்தி



   July 16, 2022 • Viduthalai

உலகில் பல நாடுகளில் மியாவாக்கி என்ற அடர்வன காடு வளர்ப்பு முறை பிரபலமடைந்து வருகிறது. அகிரா மியாவாக்கி என்ற ஜப்பான் நாட்டு தாவரவியலாளர் அறிமுகம் செய்த காடு வளர்ப்பு முறைதான் இந்த மியாவாக்கி முறை. 

இதில், குறைந்த இடத்தில், குறைந்த காலத்தில் அடர்ந்த வனப்பகுதியை ஏற்படுத்த முடியும்.இந்த காடு வளர்ப்பு முறையில், நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்படும். இதன்மூலம் அவற்றுக்கு சூரிய ஒளி மேலிருந்து மட்டுமே கிடைக்கும். பக்கவாட்டில் மற்ற செடிகள் நெருக்குவதால், மரங்கள் சூரிய ஒளியை தேடி ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு மேல்நோக்கி வேகமாக வளரும். இதனால் 10 ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ, அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்து விடும். பொதுவாக இந்த முறையில் மரங்கள், இயற்கை காடுகளை விட 10 மடங்கு அதிக வேகமாகவும், 30 மடங்கு அதிக நெருக்கமாகவும் வளரும். இந்த வகையான காடு வளர்க்கும் முறை டில்லி, பெங்களூரு, அய்தராபாத் போன்ற நகரங்களில் பிரபலமடைந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது சென்னை மாநகரின் மய்யப் பகுதிகளில் அமைக்கப்பட்ட மியாவாக்கி காடுகளில் நடப்பட்ட செடிகள் வளர்ந்து மரங்களாகி பொதுமக்களுக்கு கண்குளிர காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானப்பணி - சாலை விரிவாக்கம்

சென்னையில் கட்டுமானப் பணி சாலை விரிவாக்கம், மெட்ரோ ரயில் பணி, மேம்பால பணி உள்ளிட்ட பல காரணங்களுக்காக சாலையோர மரங்கள் பல வெட்டப்படுகின்றன. அவற்றை ஈடு செய்யும் வகையில் பூங்காக்கள், பொது இடங்களில், சென்னை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக, மரக்கன்றுகள் நடப்பட்டாலும், அவை வளர்ந்து பசுமையை பரப்பும் வரை, சுற்றுச்சூழல் மாசு, வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கிறது. சென்னையில், சுகாதாரமான சுற்றுச்சூழலுக்கு, 33 சதவீத பசுமைப் பரப்பு இருக்க வேண்டியது அவசியம் என, சூழலியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், 12 சதவீத அளவு மட்டுமே பசுமைப் பரப்பு இருந்தது. இதனால், சென்னையின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு, சென்னை மாநகராட்சி சார்பில் அடையாறில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பில், ‘மியாவாக்கி’ என்ற அடர்வனம் தொடங்கப்பட்டது. இதில், 39 வகையான, 2,200 மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது, 15 முதல் 60 அடி வரை வளர்ந்துள்ளது.

தொடர்ந்து ஓர் ஆண்டில், சென்னை முழுதும், 1,000 இடங்களில் அடர்வனம் அமைக்கப்படும் என, சென்னை மாநகராட்சி சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளை தற்போதைய திமுக ஆட்சியில் வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நீர்நிலையோரம், அரசு இடங்கள், பொதுப் பயன்பாட்டுக்கு விடப்பட்ட திறந்தவெளி காலி இடங்களில் அடர்வனம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு அடர்வனமும், 8000 முதல் 25 ஆயிரம் சதுர அடி பரப்பு உடையது. ஒவ்வொரு அடர்வனமும் தலா ₹ரூ.8 முதல்  ரூ.10 லட்சம் வரை செலவு செய்யப்பட்டு, மொத்தம், 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.தற்போது 2 ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த அடர்வனங்களில் வளர்க்கப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் செழித்து வளர்ந்துள்ளன. பொதுமக்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு மரங்கள் வளர்ந்துள்ளது. இந்த குறுங்காடுகளால், அப்பகுதிகளில் குளிர் காற்று வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பசுமை பரப்பு அதிகரிப்பு

இதுதவிர, மேலும் பல இடங்களில், தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புவாசிகளின் முயற்சியால், மரக்கன்றுகள், செடிகள் நடப்பட்டு, பசுமை பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் தற்போது, பசுமை பரப்பு 13 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை பகுதிகளில் மியாவாக்கி காடுகள் காற்று மாசை பெருமளவில் குறைக்கின்றன. அதன்படி சென்னையில் பல இடங்களில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குறுகிய இடத்தில் 2 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைக்கிறது. மியாவாக்கி முறையில் நடப்படும் மரக்கன்றுகள் வேகமாக வளர்ந்து 2 அல்லது 3 ஆண்டுகளில் குட்டி காடுகளாக மாறிவிடும். அதன்பின்னர் எந்த பராமரிப்பும் தேவைப்படாது. 2 ஆயிரம் மரங்களை வளர்த்தால் ஆண்டுக்கு 11 டன் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொண்டு, 4 டன் ஆக்சிஜனை வழங்கும். காற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுவதால் மழைப்பொழிவும் அதிகரிக்கும். இதுதவிர, இந்த மரங்கள் மூலம் அப்பகுதி மக்களுக்கு காய்கறிகள், பழங்கள் கிடைப்பதுடன் பூமியின் வெப்பமும் வெகுவாகக் குறையும்’’ என்றனர்.

என்னென்ன மரங்கள்

மியாவாக்கி எனப்படும் இந்த அடர்வனங்களில் வேம்பு, நாகலிங்கம், நாவல், கொய்யா, கருவேப்பிலை, பட்டாடி, பெருநெல்லி, மா, சிறுநெல்லி, தூங்குமூஞ்சி, எழிலைப்பாலை, பலா, செண்பகம், பூமருது, மகிழம், மூங்கில், அத்தி, மருதாணி, புங்கம், சப்போட்டா, சரக்கொன்றை, பூவரசு, நொச்சி, சீத்தாப்பழம், செம்மயிற்கொன்றை, செம்மந்தாரை, வசந்தராணி, அச்சிநறுவிலி போன்ற, 40 வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதற்கு, மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 30 சதவீத பசுமை பரப்பை அதிகரிப்பதே இலக்கு  என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த 6 மாதங்களில் 75  ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி 1 லட்சம்  மரக்கன்றுகள் நட உள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை  முழுவதும் 1000 மியாவாக்கி காடுகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

80 ஆயிரம் மரங்கள் வளர்ந்துள்ளன

வடசென்னையில் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உருவாக்கப்பட்டு வரும்  மியாவாக்கி காட்டில் சுமார் 80,000 மரங்கள் வளர்ந்துள்ளன. தென்சென்னையில்  கோட்டூர்புரம் பகுதியில் 23,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 2,000க்கும்  மேற்பட்ட மரங்கள் வளர்ந்துள்ளன. இந்திரா நகர் பகுதியில் உள்ள மியவாக்கி  காட்டில், 7,800 மரங்கள் வளர்ந்துள்ளன. வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட  கோட்டம் 155, ராயலா நகர் 2ஆவது பிரதான சாலையில், 10,000 சதுர அடி கொண்ட  நிலத்தில் 6000 சதுர அடியில் ₹8.22 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரங்கள்  ஒரு மீட்டர் இடைவெளி வீதம் 762 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்துள்ளது.  சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 197இல் மாதிரிப்பள்ளி  சாலையிலுள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 15,586 சதுர அடி கொண்ட  நிலத்தில் 2800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அத்துடன் புழுதிவாக்கம், சோழிங்கநல்லூர் உட்பட பல இடங்கள் தேர்வு  செய்யப்பட்டு மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.  திருவான்மியூர், வேளச்சேரி, வியாசர்பாடி, தலைமைச் செயலகம், விருகம்பாக்கம்,  காந்திநகர் பகுதிகளிலும் இந்த குறுங்காடுகள் மக்களை வெகுவாக  ஈர்த்துள்ளன. சென்னை மாநகர பகுதிகளில் தற்போது 20க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற குறுங்காடுகள் செழித்து வளர்ந்துள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இத்திட்டத்தை வேகமாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, சென்னையில் மேலும், பசுமை பரப்பை  அதிகரிக்க 800க்கும் அதிகமான இடங்கள் மாநகராட்சி சார்பில் தேர்வு  செய்யப்பட்டுள்ளது.  


இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:37 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அடர் காடு, ஆக்சிஜன், மியாவாக்கி
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

உழவுத் தொழில்

உழவுத் தொழில்

நாற்று நடுதல்

நாற்று நடுதல்

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்
Powered By Blogger

பிரபலமான இடுகைகள்

  • எல்லா பருவங்களிலும் விளையும் 19 புதிய பயிர் ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
    விடுதலை நாளேடு Published February 8, 2025 சென்னை,பிப்.8-  எல்லா பருவங்களிலும் விளையும் உளுந்து, சாம்பல் பூசணி, வறட்சியையும், வெள்ளத்தையும் த...
  • 2024- 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்
    விடுதலை நாளேடு Published February 20, 2024   ♦ 10,000 விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.6 கோடி மானியம் ♦ முதலமைச்சரின் “மண்ணு...
  • பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பறவைகள் பலவிதம் (பறவைகள் கணக்கெடுப்பு’)
      விடுதலை நாளேடு Published March 13, 2024 பேராசிரியர் நம்.சீனிவாசன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகம் பச்சைப்பட்டு போர்த்திய பெரும் நிலம...
  • வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம்
    வேளாண்மை  அல்லது  விவசாயம்  அல்லது  கமம்  என்பது  உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப்  பயிர்களை  உற்பத்தி செய்வதையும், கால்நட...
  • வேளாண்மையில் ஒரு புது திருப்பம் வட்டாரத்துக்கு ஒரு வேளாண் அறிவியலாளர் தமிழ்நாடு அரசு ஆணை
        Viduthalai     May 23, 2023     தமிழ்நாடு, சென்னை, மே 23   தமிழ்நாடு சட்டசபையில் கடந்த வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், அமைச்சர் எம்.ஆர்.க...
  • வேளாண் கருவி கண்டுபிடித்த அணு ஆராய்வு விஞ்ஞானி!
    இராஜபாளையத்தைச் சேர்ந்த திரு.விஜயராகவன் வயது 29. நானோ எலக்ட்ரானிக்ஸில் ஆய்வுப் படிப்பை முடித்திருக்கிறார் அவர். அய்ரோப்பிய அணு ஆராய்ச...
  • வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
    Viduthalai     March 22, 2023     ஆசிரியர் அறிக்கை,   தமிழ்நாடு,   தொடரட்டும் உழவர் புரட்சி - தொடரட்டும் 'திராவிட மாடல்' ஆட்சி! மூன்...
  • தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பன அம்சங்களைக் கொண்ட வேளாண் நிதி நிலை அறிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல்
        Viduthalai     March 21, 2023     அரசு,   தமிழ்நாடு, 👉தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்         👉தகவல் பரிமாற்றக் குழு, பயிர்க் காப்பீட்டுத...
  • சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள மியாவாக்கி காடுகளால் ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் உற்பத்தி
       July 16, 2022  • Viduthalai உலகில் பல நாடுகளில் மியாவாக்கி என்ற அடர்வன காடு வளர்ப்பு முறை பிரபலமடைந்து வருகிறது. அகிரா மியாவாக்கி என்ற ஜப...
  • இலை, தழை, கீரை விளக்கம்
    . *ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்*  *‘இலை’என்று பெயர்.*   *அகத்தி, பசலி, வ...

லேபிள்கள்

  • அடர் காடு
  • அரசு ஆணை
  • ஆக்சிஜன்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆறுகள்
  • இணையதளங்கள்
  • இயற்கை வேளாண்மை
  • இலை
  • உழவர்
  • கணக்கெடுப்பு
  • கரும்பு
  • காளான்
  • கிழங்கு
  • செயலி
  • தனி பட்ஜெட்
  • தாவரம்
  • தூர்வாருதல்
  • தேனீ
  • நிதிநிலை அறிக்கை
  • நிலவு
  • பறவைகள்
  • பனை
  • புதிய பயிர்
  • புவி
  • மண்
  • மண்புழு உரம்
  • மரபணு மாற்றம்
  • மியாவாக்கி
  • ரத்து
  • வேளாண் அறிவியலாளர்
  • வேளாண் சட்டங்கள்
  • வேளாண் திருத்த சட்டம்
  • வேளாண் துறை
  • வேளாண் நிதி நிலை

பின்பற்றுபவர்கள்

இந்த வலைப்பதிவில் தேடு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2025 (1)
    • ▼  பிப்ரவரி (1)
      • எல்லா பருவங்களிலும் விளையும் 19 புதிய பயிர் ரகங்கள...
  • ►  2024 (2)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (5)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (2)
  • ►  2022 (4)
    • ►  ஜூலை (1)
    • ►  மே (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2021 (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2020 (1)
    • ►  அக்டோபர் (1)
  • ►  2018 (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2017 (3)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2016 (7)
    • ►  நவம்பர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2015 (6)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
  • ►  2014 (6)
    • ►  நவம்பர் (6)
நீர்வரி தீம். Blogger இயக்குவது.